என்று கூறி, அவனை தங்கள் வேலைக்கு உபயோகப்படுத்திக் கொண்டனர்.
கார்த்திக் தயார் செய்திருந்த தொகையை விட குறைவாக கொடுக்க வேண்டுமென்பதற்காக, அதை அறிந்து வருவதற்கே அவனை கார்த்திக்கின் வீட்டுக்கு அனுப்பினர்.
இதெல்லாம் அறிந்த கார்த்திக், இன்று தான் அந்த ப்ராஜக்கிட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள். அதுவும் இன்னும் ஒரு மணி நேரம் தான் அதற்கான கடைசி நேரம் என்பதை அறிந்து, ஏற்கனவே அதற்கான விண்ணப்பத்தை முன்பே அனுப்பியிருந்தாலும், மீண்டும் தன் ஊழியர்களை வைத்து அவசர அவசரமாக இன்னொரு விண்ணப்பத்தை அனுப்பி வைத்துவிட்டு தான் நிம்மதியானான்.
வஞ்சகமான முறையில் தன்னை ஜெயிக்க நினைத்தவர்களை, இந்த ப்ராஜக்ட் தனக்கு கிடைப்பதன் மூலமாக தான் அவர்களுக்கு பதில் அளிக்க வேண்டுமென்று மனதில் நினைத்து புன்னகைத்து கொண்டவனை அலைபேசி அழைப்பு அழைத்து இந்த உலகத்திற்கு கொண்டு வந்தது.
குறிஞ்சியம்மாள் தான் அழைத்திருந்தார். அவன் அணைப்பை ஏற்றதும், "கார்த்தி, நித்யாவை காணல ப்பா.." என்று கவலையோடு கூறினார்.
நித்யாவை காணவில்லை என்ற செய்தி முதலில் அவனுக்கு அதிர்ச்சியை அளித்திருந்தாலும், என்ன நடந்தது என தெரியாமல் பயப்படக் கூடாது என்பதை புரிந்தவனாக, "கோவிலுக்கு போயிருப்பா பாட்டி, வந்துடுவா. நீங்க தேவையில்லாம பயப்படாதீங்க," என்று ஆறுதல் சொல்ல,
"இல்ல கார்த்தி, அவ இன்னைக்கு கோவிலுக்கு போகக் கூடாதுப்பா, அதனால தானே நேத்து அவளை தனியா விட்டுட்டு நாங்க போனோம். அப்புறம் அவ இதுவரை தனியா வெளிய போனதில்லப்பா, ஒன்னு உன்னோட, இல்ல எங்கக் கூட தான் போவா, மதியம் நானும் வஞ்சியும் கொஞ்சம் படுத்து எந்திரிக்கலாம்னு ரூம்க்கு போனதும், அவ வெளிய போயிருக்கா, போனையும் வீட்ல வச்சிட்டு போயிட்டா,
நேத்து வேற எல்லாம் அவளை திட்டிட்டீங்க, காலையில் எழுந்ததிலிருந்தே யார்க்கிட்டேயும் அவ பேசல, நான் சமாதானமா பேசும் போது கூட அவ எதுவும் பதில் சொல்லவே இல்லப்பா, அதான் பயமா இருக்கு." என்று அவர் கவலையோடு கூறினார்.
"சரி பயப்படாதீங்க பாட்டி, நித்யா தனியா எங்கும் போனதில்லை என்பதால் தான் உங்களுக்கு பயம், அவளும் எவ்வளவு நாள் தான் வீட்ல அடைஞ்சு கிடப்பா, சரி எல்லாம் திட்டிட்டோம்னு வருத்தத்தில் கொஞ்சம் வெளிய போயிட்டு வரலாம்னு நினைச்சிருப்பா, கொஞ்ச நேரத்தில் வந்துடுவா," என்று ஆறுதல கூறினாலும்,