உயிரையே வைத்திருந்தார். சாரதாவின் தமையனான விஷ்வநாதனை அவர்களின் திருமணத்திற்கு பிறகு சத்தியமூர்த்தி தன்னுடனே தொழிலுக்கு உதவியாக வைத்துக்கொண்டார். ஏனோ அவர் திருமணமே செய்துக்கொள்ளவில்லை எவ்வளவு வற்புறுத்தியும் அவர் இதற்கு மற்றும் சம்மதிக்கவில்லை. ரிஷி மற்றும் க்ருஷின் பதிமூன்று வயதில் சத்தியமூர்த்தி நோயில் விழுந்தார். அதிலிருந்து பின் அவர் மீழவே இல்லை. சாரதாவோ மிகவும் இடிந்துப் போக.. தந்தை அரவணைப்பை எதிர்பார்க்கும் வயதில் தந்தை இல்லாமல் தவித்துப் போயினர் ரிஷி மற்றும் க்ருஷ். அச்சமயத்தில் விஷ்வநாதன் தங்கை குடும்பத்திற்கு அரணாக மாறியவர் தொழிலையும் கவனித்து மூவரையும் அச்சோகத்திலிருந்து மீட்டார்.
சாரதா சத்தியமூர்த்தியின் இறப்பிற்கு பிறகு தனது பிள்ளைகளுக்காகவே வாழ்ந்தார். ஆனால் அவரதுப் பேச்சு மிகவும் குறைந்திருந்தது. ஆனால் தந்தையில்லாத ரிஷி க்ருஷிற்கு ஓர் சிறந்த வழிக்காட்டியாக மாறி இருவரையும் நற்பண்புகளுடன் வளர்த்தார். தமையனின் துணை அவருக்கு எவ்வளவு ஆறுதல் அளித்தது என்று அவரால் வார்த்தைகளால் உறைக்க இயலாது என எப்போதும் நினைப்பார். ஏன்னென்றால் அந்த அளவிற்கு சத்தியமூர்த்தியின் இறப்பு அவரை செயலிழக்க செய்திருந்தது.
ரிஷியும் க்ருஷும் கூட என்னதான் செல்வத்தோடு இருந்தாலும் ஒழுக்கத்துடன் வளர்ந்தனர். செல்வந்தராக இருந்தாலும் ரிஷிக்கு சொந்தமாக தொழில்நுட்ப துறையில் கால் பதிக்க வேண்டும் என அவன் தனது பள்ளிப் படிப்பை முடிக்கும் தருவாயிலையே முடிவெடுத்துவிட்டான், அதற்கேர்ப்ப பொறியியல் முடித்துவிட்டு தனது சொந்த உழைப்பில் அவனது நிர்வாகத்தை உருவாக்கி இந்த ஆறு வருடங்களில் பெரும் உயரத்தையும் அடைந்தான்.. க்ருஷ் ஃபேஷன் டெக்னாலஜி முடித்து விட்டு, பருத்தியிலான ஆடைகளை தற்போதைய ட்ரென்டிற்கு ஏற்ப வடிவமைத்து தரும் ஓர் சிறந்த ஆடை அமைப்பாளர்.. அவன் வடிவமைத்த ஆடைகள் பலவற்றிற்க்கும் மிகுந்த வரவேற்ப்பு.. இப்படி இருவரும் அவரவர் துறைகளில் சிறந்து விளங்குவதில் சாரதாம்மாவிற்கு என்றுமே தன் பிள்ளைகள் குறித்து பெருமை உண்டு..( ஹாஹா இன்ட்ரோ தரேன்னு ரொம்ப மொக்க போட்டு இருந்தா வெரி சாரி மக்காஸ் :D )
“வா அண்ணா, அவன் என் கிட்ட தான் இப்படினு உனக்கு தெரியுமே..” என போலியாக அலுத்துக்கொள்வதுப் போல கூற..
“மாமா இப்போ உடம்பு எப்படி இருக்கு.. நேரத்துக்கு மருந்து எடுத்துக்கரீங்களா..” என அவரை விசாரித்தான் ரிஷி..