வரவேற்க வந்த சேக்கரை தள்ளிவிட்டு.. “தள்ளுங்க மாமா.. நான் எங்க அண்ணன பார்க்க வந்தேன்.. நந்தி மாதிரி நடுவுல வந்திட்டு..” என அவரை வார.. சேக்கர் தான் பே’வென டக் அவுடான பேட்ஸ்மேன் மாதிரி முழித்துக் கொண்டிருந்தார்.. நமுட்டு சிரிப்புடன் அண்ணனிடம் சென்றாள்..
“டேய் குட்டிமா.. காலை’ல ரெண்டு தடவ வந்தேன் டா உன்னை பார்க்க.. ஆனா நீ நல்ல தூங்கிட்டு இருந்த அதான் வந்திட்டேன்..” என அவன் அதி முக்கியமாக பதிவு செய்ய.. பின்னே அவள் தான் பார்க்க வரவில்லை என்று ஆர்பாட்டம் செய்துவிடுவாளே.. சந்தோஷ் அன்று தான் அவனது வனவாசத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்பியிருந்தான்(onsite’nga :P)..
“அம்மா சொன்னாங்க ண்ணா…”என அவனிடம் பேச ஆரம்பிக்கும் பொழுது..
“ஷைலுக் கண்ணா.. மணி பதினொன்னு ஆகுது.. நீ இன்னும் சாப்பிடல’ல.. வா வந்து சாப்பிடு.. இப்போ தான் உங்கம்மா கூப்பிட்டு சொன்னா.. வா வா..” என அவளை அவசரப்படுத்த.. சேக்கரும் சந்தொஷும் அவளோடு டைனிங்க் ரூமிற்கு சென்றனர்.. தாயை நினைத்து அவளது முகத்தில் ஓர் மென்னகை வந்து ஒட்டிக் கொண்டது..
சங்கீ அவளுக்கு பறிமாரும் அவகாசத்தில் அவனின் அமெரிக்கா கதையை பூராக் கேட்டு முடித்து இருந்தாள்.. அப்பொழுது தான் அவளது வலது கை விரலில் இருந்த சின்ன கட்டை பார்த்து பதறி..
“என்ன குட்டிமா இது கட்டு.. எங்கிட்ட ஏன் யாரும் சொல்ல’ல” என ஏகத்துக்கும் அவன் பதற..
சேகர் “மேடம் வண்டி’ல பின்னாடி உக்கந்திட்டு போனா தான் தெரியுமே.. ஓற்றவங்களை ஒழுங்காவே ஓட்ட விட மாட்டான்னு.. ரித்து கூடப் போய் அவள பயமுறுத்தி ரெண்டும் கிழ விழுந்துட்டு வந்துருக்குங்க..” என கூற..
பிறகென்ன போதும் போதும் என்னும் அளவிற்கு அட்வைஸ் மழையாக கொட்ட.. அதில் நம் நாயகி கடுப்புடன் நனைந்துக் கொண்டிருந்தாள்.. அதில் கொஞ்சமே கொஞ்சூண்டு அந்த ஊர் பெயர் தெரியாதவனின் நினைப்பு மட்டும் ஜில்லென அவளுள்.. அதுவும் அவனது குறும்பு + சுவாரஸ்யம் கூடிய பார்வை அவள் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தன..
அன்றைய தினத்தை சந்தோஷமாக அனைவருடன் கழித்துவிட்டு.. இரவில் அவன் நினைவுகளுடன் படுக்கையில் விழுந்தாள்.. “ஷைலு இது தேவையில்லாத எண்ணம்.. எவனே தெரியதவன பத்தி நெனச்சு டைம் வேஸ்ட் பண்ணாம தூங்கு.. அப்புறம் நாளைக்கு க்ளேசில் போய் தூங்கி வழியனும்..” என அவளுக்கு அவளே பேசிக்கொண்டு தூங்கிப்போனாள் அவனது நினைவுடன்..!!!!!
தொடரும்
Go to Maravenaa ninnai story main page
{kunena_discuss:1161}