(Reading time: 6 - 12 minutes)

தொடர்கதை - மறவேனா நின்னை!?!? - 07 - ஆர்த்தி N

maraveno ninnai

சூர்யா ஆர்வம் தாங்காமல் அங்கும் இங்கும் நடந்துக் கொண்டிருந்தான்.. ஓவ்வொரு தடவையும் அந்த செவிலிப் பெண்ணிடம் ரிசல்ட் எப்போ வரும் என கேட்டு நச்சரிச்சுக் கொண்டிருந்தான்.. இவனைக் கண்டாலே அப்பெண் முறைக்க ஆரம்பித்துவிட்டார்..

இவனை கண்டு இருப்பெண்களும் சிரித்துக் கொண்டிருந்தனர்.. “மாமா கொஞ்சம் இங்க வாங்க.. விட்டா அந்த நர்ஸ் உங்கள அடிச்சிருவாங்கப் போல..”

“ஏய் வாலு ஒன் ஹார் நு சொல்லிட்டு இவளோ நேரம் பண்ணறாங்க.. அதான்..” என முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சொன்னான்..

சிரித்துக் கொண்டே திரும்பியப் பொழுது அன்று மாலில் க்ருஷுடன் பார்த்த பெண்ணை பார்த்தாள்.. ஏனோ உள்ளுணர்வு உந்த அவள் பின்னே சென்றாள்..

“அக்கா ஒன் மினிட்.. எனக்கு தெரிஞ்சவங்க மாதிரி இருக்காங்க..பார்த்திட்டு வந்திடறேன்.. டாக்டர் கூப்ட்டா நீங்க ரெண்டுப் பேரும் போய்ப் பார்த்துட்டு வாங்க..” என வேகமாக சொல்லிவிட்டு பதிலுக்கு கூட காத்திராமல் சென்றாள்..

இருவரும் கேள்வியாக பார்த்துவிட்டு டாக்டரின் அழைப்புக்காக காத்திருந்தனர்..

சைத்தன்யா மற்றும் ராஜ் அங்கு ஓரமாக நின்று பேசிக்கொண்டிருந்தனர்.. ஏன் என்றே தெரியாமல் ஷைலு அவர்கள் கண்களில் படாதவாறு நின்றுக் கொண்டாள்..

“அப்பா நீங்க ஏன் அப்பு அந்த பொண்ணு பேர் சொன்னது அவங்க கிட்ட சொல்ல’ல?!?” ராஜின் ஒரேப் பெண் தான் சைத்தன்யா

“அவனுக்கு நினைவு வந்தது’ல இருந்து அந்தப் பேர் தான் சொல்லிட்டு இருக்கான்.. என்னனு தெரியாம எப்படி சொல்லுறது..”

“என்ன பேர் பா அது..” என ஆர்வம் தாங்காமல் கேட்டாள்..

“அனு நு நினைக்கிறேன்.. ஏன்னா அவன் அனும்மா அனும்மான்னு தான் சொன்னான்.. என்னனு தெரியாம இதப் பத்தி பேச வேண்டாம்” என இருவரும் பேசிக் கொண்டே நகர்ந்தனர்..

இவர்கள் பேசியது அவளுக்கு தெளிவாக கேட்டது.. அவளின் படபடப்பிற்கு அளவே இல்லை.. அவன் அவளை அழைக்கும் விதம் காதோரம் ஒலித்தது.. அவர்கள் யாரைப் பற்றி பேசினார்கள் என்று தெரிந்தே ஆக வேண்டும் என.. எதற்கு தேடுகிறோம் என அறியாமல் அங்கு முழுவதும் அவளவனை தேட ஆரம்பித்தாள்..

நேரமாக ஆக அவளறியாமல் அவள் கண்களில் நீர் துளிர்க்க ஆரம்பித்தது..

‘கடவுளே அவருக்கு எதும் இருக்க கூடாது.. எனக்கு ஏன் இப்படி எல்லாம் தோனுதேனு தெரிலையே..’ என தன்பாட்டுக்கு மனதுக்குள் பொலம்பிக் கொண்டு..

அந்த ஐசியு வாசலில் வந்து நின்றாள்.. அந்த கண்ணாடி தடுப்பு வழியே அங்கு படுத்திருந்த உருவத்தை பார்த்து அவள் கண்கள் தெரித்து விடும் அளவிற்கு விரிந்தது..

அது அவளவன் தான் என அவள் மனம் உறுதியாக கூறியது.. அதும் இல்லாமல் அவனிடம் அவளுக்கு பிடித்தது, அவன் புருவத்தில் ஓர் வெட்டு இருக்கும். அது அவனது வசீகரத்தை இன்னும் கூட்டுவதாக அவள் எண்ணுவதுண்டு..

அவள் நினைத்த மாதிரியே அவனுக்கு என்னமோ ஆகிவிட்டது என அவள் மனம் ஏகத்திற்கும் பதறியது.. இருந்தும் எதிர்பாரா சூழ்நிலையால் அவளால் சுத்தமாக செயல் பட முடியவில்லை.. அப்பொழுது உள்ளிருந்து வந்த இளைஞன் அவள் மேல் மோதியதோ.. அவளை பிடித்து நிறுத்தியதோ எதுவும் அவள் கருத்தில் பதியவில்லை..

அவள் மனம் அவன் பெயரை மற்றும் தான் அரற்றிக் கொண்டிருந்தது ரிஷி என..

க்ருஷ் இங்கு ராஜின் அறையில்.. “அங்கிள் எப்போ அப்புவ நாங்க வீட்டுக்கு கூட்டிடு போலாம்..?”

“ஒரு ரெண்டு நாள் பார்த்திட்டு.. தாராளமா நீங்க கூடிட்டு போலாம் டா.. ஹீ இஸ் ஃபைன் நவ்..” என மேலும் அவனின் உடல் நிலையை விளக்கி சொன்னார்..

“ஒகே அங்கிள்.. அம்மா இங்க இருக்கட்டும்.. நா ஆஃபிஸ் வரைக்கும் போயிட்டு வந்துடறேன்..” என விடைப்பெற்றான்.

“நானும் கிளம்பறேன் பா.. க்ருஷ் என்ன வீட்ல இறக்கி விட்டுட்டுப் போ டா..”என சைத்துவும் கிளம்பினாள்..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அம்மாவிடம் விடைப்பெற வந்தப் பொழுது அவன் கண்கள் ஷைலுவை தேடியது.. அவள் அங்கிருந்து சென்றிருந்தாள் ரிந்துவின் அழைப்பிற்கு இனங்க..

காரில் செல்லும் பொழுது “க்ருஷ்.. அப்பா இத சொல்ல வேண்டாம் சொன்னாங்க.. இருந்தாலும் என்னால சொல்லாம இருக்க முடியல.. அப்பு நினைவு வந்த ஒடனே முதல்ல சொன்ன வார்த்தை அனும்மா..”

க்ருஷ் சடார் என திரும்பி பார்த்துவிட்டு.. மேலே சொல்லுமாரு தலை அசைத்தான்..

“உனக்கு இந்த பேர்ல யாரையாச்சு தெரியுமா..?” அவனுக்கு அந்த பெண்ணின் கலக்கமான முகம் கண்முன் தோன்றி மறைந்தது..

“தெரியாது.. அவன் கிட்ட தான் கேக்கனும்.. கேட்டாலும் சொல்லுவானான்னு தெரியலை..” என யோசனையுடன் சொன்னான்..

சைத்துவை அவள் வீட்டில் இறக்கி விட்டுட்டு அவன் நேராக சென்றது அவர்களது இல்லம்.. வேகமாக உள்ளே சென்றவன் அப்புவின் அறை முன் தான் போய் நின்றான்.. இந்த இரண்டு வருடங்களில் எண்ணிப் பார்க்கும் அளவில் கூட அவன் இந்த அறைக்கு சென்றதில்லை..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.