(Reading time: 14 - 27 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

பார்த்தேன். அங்கே சர்மா சார் கைக்கு கிடைச்சதை தூக்கி வீசியடிச்சு கத்திட்டு இருந்தார்.”

அப்புறம்

அந்த ஜேக்வில்லை பயங்கரமாக திட்டிகிட்டு இருந்தார். அவன் அவர்ட்ட ஏதோ சொல்லி சமாதானப்படுத்திட்டு இருந்தான்ஆனால் அவர் அழ ஆரம்பிச்சுட்டார். உட்பக்கம் பார்த்து அவர் கத்திகிட்டே அழுவதை பார்க்கவும் எனக்கு என்னவோ தோணுச்சு. ஓடிப்போய் அடுத்த ஜன்னல் வழியா உள் அறையை பார்த்தேன். அங்கே அந்த குட்டி பொண்ணு படுத்து கிடந்துச்சு. வாயில் ரத்தம் வழிஞ்சிட்டு இருந்துச்சு..” அவரே தொடர்ந்தார்.

நான் முதல்ல பார்த்த பொண்ணுக்கும் இதுக்கும் ரொம்ப வித்தியாசம் தெரிஞ்சுதுநிறமே இல்லாமல் போணதுபோல அதோட கலர யாரோ துடைச்சுவிட்டதுபோல சாம்பல் பூத்துபோய் கிடந்துச்சு. பரிசோதனை கூடத்துல சில எலிகள் இப்படித்தான் நிறமிழந்து கிடந்ததை பார்த்திருக்கேன். எனக்கு புரிஞ்சிட்டது. அந்த பாவி பரிசோதனைக்காக அந்த சின்னபுள்ளையை பயன்படுத்தி இருக்கான். ஒருவேளை சோதனை தோல்வி அடைஞ்சு இருக்கலாம் அப்படின்னு தோணுச்சு. அதுதான் பிரச்சினை. நான் அங்கிருந்து வந்துட்டேன். அதுக்கு பிறகு அந்த ஜேக் சொந்த ஊருக்கு போயிட்டான்னு சொன்னாங்க. சர்மா சார்  நெஞ்சு வலியில் செத்து போயிட்டார்னு சொன்னாங்க என்ன  நடந்துச்சுன்னு தெரியல.”

அவர் எழுந்து உள்ளே சென்றார். திரும்பி வரும்போது அவர் கையில் சில பழுப்பு நிறமடைந்த தாள்கள் இருந்தன.

அன்னிக்கு சர்மா சார் ஜன்னல் வழியா விட்டெறிஞ்ச பேப்பர்கள்ல சில எங்கிட்ட இருக்கு. உங்களுக்கு ஏதாவது புரியுதான்னு பாருங்க. இத்தனை விசயங்களும் என்னைபோல சிலருக்கும் தெரியும். அவங்களையெல்லாம் வேற வேற இடத்துக்கு மாத்திட்டாங்க. எனக்கு ரொம்பவும் விவரம் தெரியாதுன்னு நினைச்சு விட்டுட்டாங்க

அவர் நீட்டிய பேப்பர்களை வாங்கிய வினய் அவற்றை மேலோட்டமாக படித்து பார்த்தான். அவை அந்த ஆராய்ச்சி குறிப்புகள்தான். உண்மையில் அந்த ஜீன் மாற்றும் சிகிச்சை அந்த குழந்தைக்கு நடைபெற்று இருக்கிறது. அதன் படிப்படியான விளைவுகள் பதியப்பட்டிருந்தன.

நான் சொன்னது சரிதானே. “

ஆமாம் மாணிக்கம். இது எப்படி  நடந்துச்சுன்னு எனக்கு புரியலஒவ்வொரு ஆராய்ச்சிக்கும் நெறிமுறைகள் உண்டு. அதனை மீறி  நடத்தக் கூடாது. அதிலும் மனித உயிரின் மீது இந்த ஆராய்ச்சிக்கள் செய்ய அனுமதி கிடையாது.”

அவர்கள் அனுமதி பெற்று செய்லைன்னு தெரியுது தம்பி. அதுக்கு பிறகு அந்த பிள்ளையோட நிலைமை என்ன ஆச்சுன்னு தெரியலை. சூரியகாந்தி பூ பூத்த மாதிரி இருந்த முகம் இன்னும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.