தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 10 - அமுதினி
ஒருநொடி உலகமே அவன் கண்முன் தட்டாமாலை சுற்றியது. மாமா என்ற அலறலுடன் மயங்கி சரிந்த மஞ்சரியை பாய்ந்து சென்று தாங்கினான் ஆதவ். அவளை கைகளில் ஏந்தியவனின் முகத்தை ஒரு முறை பார்த்தவள் அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை என்ற நிம்மதியுடன் மயங்கி போக "மஞ்சு மஞ்சு என்னை பாரு" என்ற கதறலுடன் அவளை கைகளில் வாரிக்கொண்டு காரை நோக்கி ஓட, அதற்குள் நடந்ததை பார்த்த மற்றவர்கள் அவன் பின்னே ஓடினர்.
"மஞ்சரி....மஞ்சு ...செல்லி" என எல்லோரின் கதறலும் அவளின் காதில் விழுந்ததாக தெரியவில்லை. ராஜசேகர் பதட்டத்துடன் டிரைவர் இருக்கையில் அமர, அவரின் அருகே கண்ணீரோடு அமர்ந்தார் கந்தசாமி. காரில் ஏறி அவளை மடியில் படுக்க வைத்த ஆதவ்விற்க
...
This story is now available on Chillzee KiMo.
...
இன்னும் மயக்கமா இருக்காங்க. இன்னும் ஒரு நாற்பத்தி எட்டு மணி நேரம் கழிச்சு தான் எதுவும் சொல்ல முடியும். அவங்க கண்டிஷன் இப்போ கொஞ்சம் ஸ்டெபிளா இருக்கு. இது அப்படியே கன்டினியூ ஆச்சுன்னா பரவால்லை.