தொடர்கதை - காரிகை - 14 - அமுதினி
"வாம்மா பவித்ரா. ரொம்ப சந்தோஷம். நீ இந்த ஆஸ்ரமத்துடைய டைரக்டர்ரா பொறுப்பெடுத்துக்கிட்டதை நினைக்கும் போது பெருமையா இருக்குமா" அந்த ஆஷ்ரமத்தை நிர்வகிக்கும் பெண்மணி சொல்லவும், "தேங்க்ஸ் மேடம்" என்று ஒரு புன்னகையுடன் அவருக்கு நன்றி உரைத்தவள் அவருடன் சேர்ந்து உள்ளே நடந்தாள்.
"உக்காரும்மா. இதோ இதெல்லாம் ஆஸ்ரமத்துடைய அக்கவுண்ட்ஸ் டீடெயில்ஸ். இந்த மந்த் என்னென்ன எக்ஸ்பென்சஸ், எவ்ளோ டொனேஷன் வந்துருக்கு, இதர நன்கொடை பொருட்கள் பற்றின டீடெயில்ஸ் எல்லாம் இதுல இருக்கு" என்றவர் ஒரு பைலை எடுத்து அவள் முன் வைத்தார்.
கைகளில் அதை வாங்கியவள் இரண்டு நிமிடங்கள் அதில் பார்வையை ஓட்டினாள். ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது அவளுக்கு. மாதம் மாதம் செலவு அதிகமானதே தவிர வரவு குறைவாக இருந்தது.
"அப்பறம் பவித்ரா, இங்க உடனடியா செய்ய வேண்டிய வேலைகள் சில பெண்டிங் இருக்கு. இன்னும் ரெண்டு டாய்லெட் கட்டணும். அப்பறம் நம்ம செக்யூரிட்டி தாத்தா இந்த மாசத்தோட வேலையை விட்டு நிக்க போறாரு. அவருக்கு பதிலா ரெண்டு பேரை வேலைக்கு போடணும். அப்பறம்..." அவர் ஏதோ ஒரு நோட் புத்தகத்தை திறந்து புரட்ட,
"மேடம்" என்ற பவித்ராவின் குரலில் அவளை பார்த்தார்.
"சொல்லும்மா " கையில் இருந்த புத்தகத்தை மூடி வைத்து விட்டு நிமிர்ந்தார் அவர்.
"நம்ம ஒரு லிஸ்ட் ப்ரீபெர் பண்ணலாம். இங்க என்னென்ன தேவைகள் இருக்கோ அதெல்லாம் ப்ரையாரிட்டி வைஸ் லிஸ்ட் அவுட் பண்ணிடலாம். நான் இந்த அக்கௌன்ட் புக் எடுத்து போறேன் மேடம். அதெல்லாம் பார்த்துட்டு நெஸ்ட் நம்ம என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணிக்கலாம்" பவித்ரா சொல்லவும் அவருக்கும் அதுவே சரி என பட, அடுத்த இரண்டு மணி நேரம் அதிலே கழிந்தது.
எல்லாம் பட்டியலிட்டு முடித்து நிமிர்ந்த பவித்ரா நேரம் பார்த்தாள் . இரவு எட்டு மணியை தாண்டியிருந்தது. கையில் அந்த பைலை எடுத்து கொண்டு வெளியே வந்தாள்.
வெளியே நின்றிருந்த சத்யாவை பார்த்ததும் அவளுக்கு ஆச்சர்யம். இவன் என்ன இங்கு வந்திருக்கிறான் என்ற யோசனையோடு அவனருகே சென்றாள்.
"நீங்க என்ன இங்க...?" பவித்ராவின் குரலில் அதுவரை அங்கு விளையாடி கொண்டிருந்த குழந்தைகளை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவன் திரும்பினான்.
"லேட் ஆயிடுச்சு. அம்மா நீ வர வரைக்கும் வெயிட் பண்ணி கூட்டிட்டு வர சொன்னாங்க. அதான்" என்றவன் முன்னே நடக்க அவளும் அவனுடன் சேர்ந்து நடந்தாள் .