"நானே வந்துருப்பேன். உங்களுக்கு எதுக்கு சிரமம்? " -பவித்ரா.
"நோ ப்ரோப்ளேம். நடந்து தான் வந்தேன், நடந்து போலாமா இல்லை ஆட்டோ புடிக்கணுமா?" சத்யா கேட்கவும், "இல்லை இல்லை நடந்தே போலாம். கொஞ்ச தூரம் தான" பவித்ரா சொல்லவும் அதற்க்கு மேல் சத்யா எதுவும் சொல்லவில்லை. சில நிமிடங்கள் அமைதியில் கழிந்தது.
"கையில் என்ன? " பவித்ராவின் கையில் இருந்த பைலை பார்த்தபடி கேட்டான் சத்யா.
"அது...அது ஆஸ்ரமத்துடைய அக்கௌன்ட் புக். சில பேசிக் நீட்ஸ் இருக்கு. அதெல்லாம் செய்யணும். அதான் எல்லாம் லிஸ்டவுட் பண்ணி எடுத்துட்டு வர லேட் ஆயிடுச்சு" தாமதமானதற்கு காரணம் சொல்வதை போல சொன்னாள் பவித்ரா.
"ஓஹ் " என்றவன் அதற்க்கு பின் அமைதியாகவே நடந்தான். பதினைந்து நிமிட நேர நடையில் வீட்டை அடைந்தனர் இருவரும். வாசலில் லக்ஷ்மியும் உமாவும் ஏதோ அரட்டை அடித்தபடி இவர்களுக்காக காத்திருந்தனர்.
இருவரும் ஒன்றாக இனைந்து நடந்து வருவதை கண்ட லக்ஷ்மியின் மனம் நிறைந்து போனது. எத்தனை அழகான ஜோடி, கடவுளே இவர்கள் இருவரும் சீக்கிரமே இணைய வேண்டும் என கடவுளிடம் வேண்டி கொண்டார் லட்சுமி.
இரவு உணவு முடிந்ததும் எப்போதும் போல லக்ஷ்மிக்கு சமையலறையை ஒதுக்க உதவியவள், பின் அந்த பைலை எடுத்து கொண்டு ஹாலில் வந்து அமர்ந்தாள்.
"என்னடா தூங்கலையா? " லட்சுமி கேட்கவும், "இல்லைம்மா. கொஞ்சம் அக்கௌன்ட்ஸ் பாக்கணும், உள்ள உமா தூங்கற. அதான் வெளியே வந்து உக்காந்தேன். நீங்க படுங்கம்மா. நான் கொஞ்ச நேரம் பார்த்துட்டு படுத்துக்கறேன்" எனவரும் லக்ஷ்மியும் அவளிடம் சீக்கிரம் உறங்குமாறு சொல்லிவிட்டு அவரின் அறைக்கு சென்றார்.
அந்த அக்கௌட்ஸ் புத்தகத்தை எடுத்தவள், குறைந்த பட்சம் ஒரு மாத செலவு என்ன வருகிறது என தனியாக ஒரு பேப்பரை எடுத்து எழுதி வைத்தாள். பின் வருமானம் வரும் வழிகள் என பார்த்தால் பெரும்பாலும் அது நன்கொடை மூலமாக இருந்தது. சிறிய வருமானம் அங்கு உள்ள பெண்கள் செய்யும் சிறு சிறு கைத்தொழில் மூலமாக வருகிறது. ஏதோ யோசனையுடன் இருந்தவள் முன்னே நிழலாடுவதை கண்டு நிமிர்ந்து பார்த்தாள். சத்யா தன நின்று கொண்டிருந்தான்.
"நான் பாக்கலாமா?" என்றபடி அவளின் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தான். அவன் அருகே அமர்வது அவளுக்கு என்னவோ போல இருந்தாலும் அவன் எந்த தவறான நோக்கமும்