(Reading time: 5 - 10 minutes)
Idhu namma naadunga
Idhu namma naadunga

 என்னை ராமநாதபுரம் தண்ணியில்லாக் காட்டுக்கு போகச்சொல்லி ஆர்டர் வந்திருக்கு, நீதான் அமைச்சரிடம் சிபாரிசு பண்ணி, அந்த ஆர்டரை கேன்சல் பண்ணவைச்சு, ஹைவேஸ் செக்கிங்லே போடச் சொல்லணும், உனக்கு கொடுக்கவேண்டியதை சொல்லு, கொடுத்திடறேன் நாளைக்கே........"

 " அப்படியென்ன இருக்கு, அந்த போஸ்டிங்லே?"

 " தெரியாதமாதிரி, கேட்காதேண்ணே! அப்படி, இப்படின்னு ஒரு நாளைக்கு ஐநூறு ரூபா பணம், ஒண்ணோ ரெண்டோ விஸ்கி பாட்டில், அரிசி மூட்டை இப்படி ஏதேதோ......"

 " உன்னை மேலதிகாரிங்க கையும் களவுமா பிடிச்சு டிஸ்மிஸ் பண்ணிட மாட்டாங்களா?"

 " எங்க மூலமா, அமைச்சர் வரையிலும், எல்லா லெவல்லே உள்ளவங்களுக்கும் இதிலே பங்குண்டு.........."

 " அப்படின்னா, ஒருநாளைக்கு அவ்வளவு மாமூலா கிடைக்குது?"

 " நீ ஒரு ஆளுண்ணே! சட்டவிரோதமா, எல்லாவிதமான தவறும் ஹைவேஸிலேதான் நடக்குது. அவங்க எங்களுக்கு கொடுப்பது, ஆயிரக் கணக்கிலேன்னா, அவங்க கோடிக்கணக்கிலே கொள்ளை அடிக்கிறாங்க....."

 "தவறான வழியிலே போயாவது, பணம் சேர்க்கணுமா?"

 " பணம் சேர்க்கறதா? வாங்கின கடனை திருப்பிக் கொடுக்கத் தானே, இந்தப் பணம்!"

 " அவ்வளவு பணம் எதுக்கு கடன் வாங்கினே?"

 " ஐந்து லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்துத் தானே, போலீஸ் உத்தியோகத்துக்கு வந்தேன், அந்தக் கடனை திருப்பி தரவேண்டாமா?"

 " சரி, அமைச்சரிடம் பேசிப் பார்க்கிறேன், உன் பேரு, எந்த காவல் நிலயம், எல்லாம் எழுதிக்கொடு!"

 " இந்தாண்ணே! அதெல்லாம் எப்பவும் ரெடியா இருக்குண்ணே!"

 போலீஸ்காரன் மகிழ்வுடன் நகர்ந்ததும், இங்கர்சால் அடுத்தது ஒரு மருத்துவ மனைக்குள் நுழைந்தார்.

இதன் தொடர்ச்சி அடுத்த பகுதியில்

தொடரும்

Episode # 02

Episode # 04

Go to Idhu namma naadunga story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.