தொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 25 - ராசு
அமுதநிலாவிற்குத் தாயிடம் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அவள் ஆவலாகத் தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் வேதனை கொண்டாள்.
தனக்காக மட்டுமே உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கிறாள். இப்போது அவள் மனதில் நிம்மதி பிறக்க வேண்டுமானால் அது தன்னுடைய திருமணத்தால் முடியும் என்ற உண்மை அவளுக்கு உரைத்தது.
முன்பென்றால் அவள் எந்த யோசனையும் இல்லாமல் சட்டென்று சம்மதித்திருப்பாள். இப்போது அவள் மனம் முழுவதும் இளங்கனியன் நிறைந்திருக்கிறானே.
அவனை நினைத்துக் கொண்டிருப்பதும் அவள் அவர்களுக்கு செய்யும் துரோகம் தானே? அவனை மனதில் நினைத்து ... "வாங்க. வாங்க." சாரதா ஆவலுடன் வரவேற்கும் குரல் கேட்டு வெளியில் வந்தவள் திகைத்தாள். அங்கே இளங்கனியனும் கண்ணம்மாவும் நின்றிருந்தார்கள்.
This story is now available on Chillzee KiMo.
...