(Reading time: 6 - 12 minutes)
Idhu namma naadunga
Idhu namma naadunga

 இருநூறு கோடி ரூபாய் பட்ஜெட்! பிரபல நடிகர் வசந்தன், சிவனா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாரு, என்ன பொருத்தம் பாருங்க, அவர் வசந்தன், நீங்க வசந்தா!

 சத்தியமா சொல்றேங்க, இது மனித செயலே அல்ல, தெய்வீக செயல்!

 வசந்தா! உங்களுக்கு பத்து கோடி ரூபா, சம்பளம் வாங்கித் தரேன், ரெண்டு வருஷத்திலே படம் எடுத்து முடிந்து தியேட்டருக்கு வந்துடும், அதுக்குப் பிறகு உங்க பின்னாலே, மற்ற தயாரிப்பாளருங்க ஓடிவருவாங்க, பாருங்க!"

 " இருங்க, எனக்கு நடிக்கவே தெரியாதுங்க!"

 " எதுக்கு நடிக்கணும்? நீங்க, முகத்தை காட்டினாலே போதும், மக்கள் எழுந்து நின்னு கையெடுத்து கும்பிடுவாங்க! இப்ப உங்களுக்கு வேற வேலை இல்லைன்னா, என்னோட வாங்க! மேக் அப் டெஸ்ட் போட்டு பார்த்துடுவோம்........"

 என்னதான் நடக்கிறது, பார்ப்போம்! என வசந்தா அவளுடன் சென்றாள்.

 தயாரிப்பாளர் ஆபீஸ் உள்ளே நுழையும்போதே, அங்கிருந்தவர்கள அனைவரும் வாய் பிளந்து கண் இமைக்காமல் பார்த்தனர்.

 நர்மதா அவளை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று, அறையின் கதவை சாத்தினாள்.

 " கதவை ஏன் சாத்தறீங்க?"

 " இது தயாரிப்பாளரின் தனி அறை! அவருடன் நாம் பேசுவது வேறு யாருக்கும் கேட்கக்கூடாது......"

 சிறிது நேரத்தில் உட்பக்கமிருந்து, ஒரு வயதானவர் வந்து தனது ஆசனத்தில் அமர்ந்து, வசந்தாவை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, நர்மதாவிடம் பேசினார்.

 " பிரமாதம் நர்மதா! இந்த முகத்தைத்தான் தேடினோம், இந்தா! இரண்டாயிரம் ரூபாய்! முதல்லே போய் நல்லா சாப்பிடு! அதற்குள்ளே நான் இவங்களிடம் பேசறேன்...."

 பணத்தை வாங்கிக்கொண்டு, நர்மதா வெளியேறியதும், தயாரிப்பாளர், வசந்தாவைப் பார்த்து ஜொள்ளு விட்டுக்கொண்டே கேட்டார்.

 " நீ யாரு? என்ன பேரு? எந்த ஊரு? விவரமா சொல்லு! அதுக்குமுன், இந்த பழரசத்தை குடி! வேற ஏதாவது சாப்பிட வேணுங்கிறதை சொல்லு, வரவழைக்கிறேன்!"

 பழரசத்தை வசந்தாவின் முன் நகர்த்தினார்.

 " என் பேரு வசந்தா! என்னை இவங்க நடு வீதியிலே பார்த்து, இங்கே அழைத்து வந்துட்டாங்க!"

 " அது அவ பிழைப்பும்மா! ஆனா, அப்படி இங்கே வந்தவங்கள்ளாம் இன்னிக்கி ஓகோன்னு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.