அந்த மனையை அரசு ஆஸ்பத்திரி, கல்லூரி கட்ட வாங்கிக்கிறதுபோல, கோடிக்கணக்கான ரூபாய் அந்த பினாமி பெயரிலே வழங்கிவிட்டு பணத்தை சுருட்டிட்டாரு!
ஆனா, ஒரு தப்பு பண்ணிட்டாரு, அந்த பினாமி அவர் பண்ணையிலே கூலி வேலை செய்த பரம ஏழை! எழுதப் படிக்கக்கூட தெரியாது, அவன் பெயரிலே பேங்கிலே பொய் கையெழுத்து போட்டு, அகௌண்ட் ஓபன் பண்ணி, பணத்தை போட்டிருக்காரு, இதுக்கு பேங்க் அதிகாரியும் உடந்தை!
விசாரணை நடத்தினா, செமையா மாட்டுவாரு......பதவி போவது மட்டுமல்ல, சிறை தண்டனையும் கிடைக்கும்...
சார்! இந்த விஷயம் நமக்குள்ளே ரகசியமா இருக்கட்டும்!
எப்படியாவது அமைச்சர் காதிலே போட்டு
விடுங்க!"
இங்கர்சாலுக்கு இது அந்த நேரத்துக்கு உதவியாக இருக்கவே, தன்னை அமைச்சர் வசிக்கும் தெருவுக்கு அழைத்துப் போகச் சொன்னார்.
போலீஸ் அதிகாரிக்கு மிக்க மகிழ்ச்சி! அவருடைய பழிவாங்கும் படலம் இவ்வளவு விரைவாக அரங்கேறுமென எதிர்பார்க்கவில்லை!
அடுத்த பகுதியில் தொடருவோம்
தொடரும்
Next episode will be published on 31st Mar. This series is updated weekly on Tuesday mornings.