தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 29 - கண்ணம்மா
பாரிஜாதம் பாட்டி பரணி தாத்தா வாங்கி தந்த சில புடவை நகைகளை பரமூ தாத்தா கொண்டு வந்து தந்து இருந்ததால் அவர்களின் நினைவுகளோடு அதனை அனிந்து இருந்தாள் பௌவ். அவள் அனிந்து இருந்த அரக்கு நிறப் புடவை பாட்டி பேவரைட் ... தேவதையாக ஆடி ஓடி வேண்டியதெல்லாம் செய்துக்கொண்டு இருந்தாள். அம்மூமா வா டா வந்து நீ காப்பி சாப்பிட்டு அப்பறம் வேலையெல்லாம் பார்டா...
தோ வறேன் ஆதிபா என்று சின்னப்பிள்ளையாக ஓடியவள்ளை கண்கலால் தொடர்ந்தவன் அவள் பின்னால் இவனும் சென்றான். கமல் தன் மருமகளை அழைத்து அவள் முகத்தையே பார்தபடி இருந்தார்.
என்ன மாமா என்ன ஆச்சி...
அம்மூடா இது பாட்டியோட புடவையா?
ஆமாம் மாமா இரண்டு தடவை தான் கட்டி இருப்பாங்க நான் ஒரு வாட்டி காலேஜ் ப்ரோக்ராம்க்கு கட்டிகிட்டு போனேனா அப்போ இது எனக்கு ரொம்பவே புடிச்சி போச்சி பாட்டிகிட்ட நானா எதுவும் கேட்டதில்லையாம் அதனால் இந்த புடவையோடு ஒரு செட் நகையும் சேர்த்து என்னிடம் அப்பவே தந்துடாங்க. ஏதோ நியாபகத்தில் அதை நம்ப வீட்டிலே வச்சிடேன் மாமா. அப்பரம் 3 , 4 வருஷமா அதை எடுக்கனும்னு அணியனும்னு தோனலை. இப்போ தாத்தா கொண்டு வந்து தந்ததும் போட்டுக்கிடேன்.
நம்ப வீட்டு சாமி அறையில் தாத்தாவும் பாட்டியும் நிற்க்கும் படம் இருக்குல என்று கமல் ஏதோ தெனரியபடி சொல்ல வர...
ஆமாம் மாமா தாத்தா எனக்கு பெண் பார்க்க என்னோட போட்டா வேண்டும்னு கேமராமேனை வீட்டுகே கூட்டி வந்து படம் எடுத்தாங்க. ஈஷ்வர் அத்தான் என்னை பார்தது இல்லையாம், என்னைப் பார்தால் வேண்டாம்னு சொல்மாட்டார்னு தாத்தா நம்பிகையா இருந்தாங்க. அதனால் தான் போட்டே ஸெஷன்லாம். அப்பதான் பாட்டி தாத்தா இரண்டுபேரையும் நிர்க வைத்து நான் தான் அடம் பிடித்து படம் பிடிக்க வைத்தேன். உங்களுக்கு அனப்பின என்னோட படத்தோட நான் தான் அந்த படத்தையும் வைத்து அனப்பியது.
நீ நிஜமாவே என் அம்மா மாதிரி தான் டா அம்மூமா... என்று அவர் தன் மருமகளின் கையைபிடித்துக்கொண்டு கண்களங்க
அதான் உங்க அம்மா நான் இங்க இருக்கேனே... அப்பறம் என்ன மாமா இபபடி கண் கலங்குரீங்க.
அவரும் தன்னை ஒரு நிலைக்கு கொண்டு வந்து பின் எங்க அம்மா என்னை இப்படி ஒன்னும் கூப்பிட மாட்டாங்க.