“அதே சந்தேகம் உளவுத்துறைக்கும் இருந்ததால் எங்களின் கண்காணிப்பு வட்டத்தை பெரிதாக்கினோம்... முதலில் தற்கொலை செய்துகொண்டவர்களின் பொது விஷயத்தை எடுத்துக்கொண்டோம்... கொலை செய்யப்பட்ட சாந்தியும் இவர்கள் கலைக்கல்லூரியை சேர்ந்தவர்தான்... அவர்கள் வீட்டில் ஆராயும்போது அவரின் கணினியில் எங்களுக்கு கிடைத்த தகவல் சாந்தியும், நரேந்திரனின் மகன் சுந்தரும் காதலித்தார்கள் என்பது... மேலும் அவர் வீட்டில் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களும் சிக்கின... அதை ஆதாரமாக எடுத்துக்கொண்டு சாந்தியின் கொலையையும், மணியின் தற்கொலையையும் ஆராய ஆரம்பித்தோம்....”
“இரண்டு வகையாக வழக்கை ஆராய ஆரம்பித்தோம்..... மாணவர் சேர்க்கை, உறுப்பு திருட்டு என்று பிரித்து வழக்கை எடுத்து சென்றோம்...”
“இத்தனை தற்கொலைகள், கொலைகள் நடந்திருந்தாலும் எதிலும் எங்களுக்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை.... கடைசியாக அந்த மாணவனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ரிப்போர்ட் எங்களிடம் மாட்டியது.... அதே போல் கடைசியாக நடந்தது தற்கொலை அல்ல கொலை என்பதற்கான கண்ணால் பார்த்த சாட்சியும் சிக்கியது.....”
“அந்த மாணவனின் ரிப்போர்ட் கிடைத்தவுடனேயே அவர்களை கையும் களவுமாக பிடிக்க எங்கள் டீம் தயாராகிவிட்டது.... அந்த நேரத்தில் குறிப்பிட்ட வரை சிறுநீரகம் தேவைப்படுவதாக பல சிறுநீரக ஏஜென்ட்டுகள் அலைந்து கொண்டிருப்பது தெரியவந்தது.... அவர்களை விசாரித்ததில் அது தேவைப்படுவது நரேந்திரனின் மருத்துவமனைக்கு என்று அறிந்து கொண்டோம்.... அதே ரத்த வகையை சேர்ந்த மாணவன் மற்றும் அவன் தந்தையை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தோம்..... எங்களின் நல்ல நேரம் அந்த மாணவனின் தந்தைக்கு அல்சர் இருந்தது....”
“பணத்திற்கு கஷ்டப்படுபவனாக நாங்கள் தேர்ந்தெடுத்த மாணவன் நடிக்க, எதிர்பார்த்தது போலவே அவன் தந்தையின் சிறுநீரகத்தில் கோளாறு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர் கூறினார்.... இவர்களை சந்திப்பதற்கு முன்னால் அவருக்கு பூரண உடல் பரிசோதனை வேறு இடத்தில் செய்து அந்த ரிப்போர்ட் வாங்கி கொண்டோம்... இவர்கள் பரிசோதனை செய்த இடத்தில் கொடுத்த ரிப்போர்ட் அதற்கு நேரெதிராக இருந்தது..... அதே போல் அந்த மாணவனுக்கும் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது....”
“மாணவனின் சிறுநீரகம் அவர்களுக்கு தேவைப்படும் சிருநீரகத்துடன் பொருந்த அறுவை சிகிச்சைக்கான நாள் குறிக்கப்பட்டது.... நாங்களும் இவர்களை கூண்டோடு பிடிக்க நாள்