அடிப்பட்டு அந்த இடத்திலேயே இறந்து விட்டான்...”
“சாதாரணமாக விசாரணைக்கென்று அழைத்து வரும் கைதிகளை ஓரளவுக்கு மேல் துன்புறுத்தக் கூடாதென்பது விதி... ஆனால் இங்கு இன்ஸ்பெக்டர் அடித்த அடி ஒவ்வொன்றும் அவன் இறக்க வேண்டும் என்றே அடித்தது போல் இருந்தது.... எங்களுக்கு கிடைத்த ஒரிஜினல் இறப்பு சான்றிதழில் அவனுக்கு பட்டிருந்த காயங்கள் அப்படி....”
“இன்ஸ்பெக்டர் அவ்வாறாக அடித்தது நரேந்திரனின் ஆணைப்படியே... தான் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக அந்த மரணத்தை இன்ஸ்பெக்டர் தற்கொலையாக மாற்றி விட்டார்.... இதற்கு அரசாங்க மருத்துவரும் ஒத்துழைத்திருக்கிறார்.... அது மட்டும் அல்ல மாணவிகளின் கொலைகளையும் தற்கொலைகளாக மாற்றியது அந்த இன்ஸ்பெக்டரும், அரசாங்க மருத்துவருமே..... இவை எல்லாம் விசாரணையில் எங்களுக்கு கிடைத்த தகவல்கள்... இவை தவிரமும் அந்த காவலதிகாரி மீதும், மருத்துவர் மீதும் பல குற்றங்கள் உள்ளன....”
“இதற்கு நடுவில் நாங்கள் நரேந்திரனின் கல்லூரிக்கு வேவு பார்க்க அனுப்பிய மாணவி அங்கு ஒரு பரிசோதனை கூடம் இருப்பதை அறிந்தாள்.... அவள் அங்கு உளவுப்பிரிவு அதிகாரியுடன் சோதனை செய்ததில் பல திடுக்கிடும் ஆதாரங்கள் கிடைத்தன.... அங்கிருந்து இந்த வழக்கு தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுதும் மற்றும் சில நாடுகளுக்கும் பயணிக்க ஆரம்பித்தது....”
தொடரும்
Next episode will be published on 6th May. This series is updated fortnightly on Wednesday mornings.
Go to Gayathri manthirathai story main page
{kunena_discuss:1216}