(Reading time: 8 - 15 minutes)
Gayathri manthirathai
Gayathri manthirathai

குறித்தோம்....”

“அறுவை சிகிச்சை அறையில் அவர்கள் மருத்துவர்களுடன் காவல்துறை ஆட்களை கலந்து இந்த உறுப்புத் திருட்டிற்கு காரணமான மூன்று முக்கிய மருத்துவர்களை கைது செய்து எங்கள் கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்தோம்... அவர்களை விசாரிக்கும்போது எங்களுக்கு கிடைத்த தகவல் கல்லூரியில் தற்கொலை செய்து கொண்டவர்கள் பலர் தங்களின் உறுப்புகளை இவர்களிடம் இழந்ததுதான்...”

“தனித்தனியான வழக்குகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்த இடம் உறுப்புத் திருட்டு.... சாந்தி கொலை செய்யப்பட்ட காரணம் அவள் நரேந்திரனின் மகனை தன்னை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தியதால்... இதில் மணி எப்படி மாட்டினான் என்று ஆராயும்போது எங்களுக்கு கிடைத்த தகவல் அவன் பணத்திற்காக சிறுநீரக ஏஜென்ட்டாக செயல்படுவது... அவன் இருக்கும் பகுதி சற்று பின்தங்கியவர்கள் வசிக்கும் இடம்... பணத்தேவைக்காக அல்லாடுபவர்களை பேசி அவர்களின் உறுப்புகளை விற்பதே அவனின் பகுதி நேர தொழில்... முதலில் அவனுக்கு இதை யாருக்காக செய்கிறோம் என்றே தெரியவில்லை... அவன் சாந்தி விஷயமாக கைது செய்யப்படுவதற்கு சில நாட்கள் முன்புதான் தான் வேலை செய்வது நரேந்திரனுக்கு என்ற விவரம் தெரிய வந்திருக்கிறது...”

“இவன் மூன்றாவது கையாக இருப்பதால் வரும் கமிஷன் மிகக் குறைவே... அதனால் நேரடியாக நரேந்திரனை தொடர்பு கொண்டால் இன்னும் அதிக அளவில் கமிஷன் தேற்றலாம் என்ற ஆசையில் அவன் நரேந்திரனைத் தொடர்பு கொண்டுள்ளான்... நரேந்திரன் தன் விஷயம் எப்பொழுதும் தன்னை சுற்றியுள்ள முதல் கட்ட ஆட்கள் ஒரு பத்து பேரைத் தவிர வேறு யாருக்கும் தெரிவதை விரும்ப மாட்டார்... முதல் முறையாக தன் ஆட்கள் அல்லாத ஒருவனுக்கு தெரிந்ததை அவர் விரும்பவில்லை...”

“அந்த நேரத்தில் மகனின் காதலும் தெரியவர மணியைத் தொடர்ந்ததில் அவன் சாந்தியின் பின்னால் செல்வதும் தெரியவர.... வெளியிலிருந்து மணியின் தோற்றத்திற்கு பொருந்தும் ஒருவனை வைத்து சாந்தியை கொலை செய்து விட்டு அந்த பழியை மணியின் மீது போட்டுவிட்டார்.... இதில் அவர் எதிர்பாராதது மணி அதற்கு முந்தய வாரம் சாந்தியை மிரட்டியது.... அதை சாந்தி தன் தோழியிடம் கூறியது....  அது அவர்களுக்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்த விஷயம்.... ஆனால் மணி கைது செய்யப்பட்ட பின் தான் கொலை செய்யவில்லை என்பதை கடைசிவரை சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறான்.... இதில் மணிக்கும், அங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டருக்கும் இடையே வாக்குவாதம் நடந்திருக்கிறது.... இன்ஸ்பெக்டரின் அடியில் சுவரில் முட்டிக்கொண்ட மணி பின் தலையில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.