யோசித்து வந்தவனின் எண்ணம் ஷைலாரண்யாவிடம் வந்து நின்றது. அவளைப் பற்றி நினைத்த உடனே அவன் முகன் புன்னகையை தத்தெடுத்தது.
அவளைப் பற்றிய முழு விபரம் தெரிய வேண்டுமெனில் கண்ணிமைக்கும் நேரத்தில் அவனால் செயல் படுத்த முடியும்.. ஆனால் அவனுக்கு அவளுடன் பழகி அவளைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் உதித்தது. ஆனால் அவசரப்படாமல் அவனுள் தோன்றி இருக்கும் இந்த எண்ணத்தை முழுவதுமாக அனுபவிக்க வேண்டும். பிறகு அவளை எவ்வாறு அனுகலாம் என யோசித்து செயல்பட வேண்டுமெனத் தீர்மானித்தவன் அங்குள்ள பென்ச்சில் அமர்ந்தான். இப்படி பலதும் நினைத்துக் கொண்டே லேசாக அப்படியே கண்ணசறும் வேளையில் பறவைகளின் கீச் கீச் சத்தம் கேட்க ஆரம்பிக்க..
“அட கடவுளே விடிய விடிய வா இப்படி உட்கார்ந்திட்டு இருந்திருக்கோம்.. ஹ்ம்ம் முன்னப் பின்ன பெண்களோடப் பேசியிருந்தா ஏதாது தெரிஞ்சிருக்கும்.. இப்போ அவள எப்படி தான் அனுகறதுனு இப்படி ராத்திரிப் பூறா என்னை யோசிச்சு புலம்ப வெச்சிட்டாளே.. சீக்கிரம் இதுக்கு ஒரு வழிக் கண்டுப்பிடிக்கறேன்..” என்றெண்ணியவாறு உள்ளெழுந்து சென்றான்.
தொடரும்
Go to Maravenaa ninnai story main page
Next episode will be published as soon as the writer shares her next episode.
{kunena_discuss:1161}