" தெரியலியே!"
" உங்களை பெற்றவங்க, கூடப் பிறந்தவங்களை பார்க்கப் போறீங்களா?"
" என்னாலே அவங்களுக்கு ஏற்பட்ட அவமானமும் களங்கமும் போதும்! பாவம்! அவங்க நிம்மதியா வாழட்டும்!
தங்கச்சி! ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் விளங்காதுன்னு பழமொழி!
இப்ப, ஆமை, அமீனாவோட, இந்த சகாதேவனையும் சேர்த்துடுவாங்க!
ஆதாரத்துக்கு, நான் உன்னோட ஒரே நாளிலேயே, உனக்கு ஏற்பட்ட ஆபத்தை சொல்லுவாங்க! நியாயந்தானே!
எங்கே என்னை இந்தக் கால்கள் அழைத்துப் போகுதோ, அங்கு போகிறேன்.
இந்த நிமிஷம், இங்க நிக்கறேன், இதுதான் நிச்சயம்! மற்றது எதுவும் உறுதியில்லே!
நீங்களும் நிம்மதியா அந்தந்த நொடியில் வாழ்ந்து சந்தோஷமாயிருங்க! நான் வரேன்" என்று சொல்லிவிட்டு வெளியேறினான்!
எதிர்மறையாகவே வாழ்ந்து பழக்கப்பட்டது இந்த மனித சமுதாயம்!
தொடரும்...
Next episode will be published on 23rd June. This series is updated weekly on Tuesday mornings.