(Reading time: 8 - 16 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

பிரச்னை என்னன்னா, புள்ளெயை ஆசுபத்திரிக்கு நானும் இவளும் உடனே எடுத்துக்கிட்டு போய் சேர்த்துடறோம், ஆனா, அங்கே என்ன செய்வாங்கன்னா, இது கொரோனா வியாதின்னு புள்ளெயை தனி வார்டிலே வைச்சிடுவாங்க, நாங்க அங்கேயே காத்துக் கிடந்தாகணும், எத்தினி நாளானாலும்!

இந்த வீட்டை தனிமைப்படுத்தி, இங்கேயிருந்து யாரும் வெளியே போக அனுமதிக்க மாட்டாங்க, அப்பாவையும் பெரிய புள்ளெயையும் வேளாவேளைக்கு சாப்பாடு போட்டு கவனிச்சிக்கணும், பணம் பிரச்னையில்லே, மனுஷங்க யாருமில்லே, நீங்க உதவி செய்தீங்கன்னா, உங்களுக்கு கோடி புண்ணியம்!"

" நான் என்ன செய்யணும்?"

" நான் கொடுக்கிற பணத்திலே வேளாவேளைக்கு இவங்க ரெண்டு பேருக்கும் பக்கத்து ஓட்டலிலிருந்து சாப்பாடு வாங்கித்தரணும், நீங்களும் என் பணத்திலேயே சாப்பிடுங்க! வீட்டுக்கு வெளியே இருந்தே, இதை செய்யணும்......"

கரங்கூப்பி நின்ற இருவரையும் " பணம் பிறகு வாங்கிக்கிறேன், நீங்க கிளம்புங்க" என்றார்

உடனே ரெண்டு வயது புள்ளெயுடன் பெற்றவர்கள் கிளம்பியதும் ஆசுபத்திரிக்கு கிளம்பியதும், சகாதேவன், அந்த வீட்டு வாயிற்புறத்தில் இருந்த படிகளில் அமர்ந்தார்!

தொடரும்...

Next episode will be published on 7th July. This series is updated weekly on Tuesday mornings.

Go to Vazhve Maayam story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.