வந்தபிறகும் நம்மாலே கஷ்டம்னா, கடவுள்கூட நம்மை மன்னிக்கமாட்டார், அக்கா!"
" வத்சலா! நீ ஏதாவது ஐடியா வச்சிருப்பியே, சொல்லு!"
" ஐயோ அக்கா! போன் பண்ணி இந்த பிரச்னையை எழுப்பினதே நான்தான்! எனக்கு ஒரு கூடுதலான பிரச்னை!"
" அதென்னடீ, கூடுதலான பிரச்னை?"
" ராத்திரி, இந்தக் கவலையிலே, புரண்டு புரண்டு படுத்தேனா, ரஞ்சித்துக்கு சந்தேகம் வந்து துளைத்து எடுத்துட்டான், தப்பிக்க முடியலே, உண்மையை சொல்லிட்டேன், இப்ப அவன் வேறே, இம்சை பண்றான்...."
" நல்லவேளை! நாங்க யாரும் அந்த தப்பை பண்ணலை......."
" நீங்க பண்ணாட்டா என்ன? ரஞ்சித் இந்த நேரத்துக்கு மூணு சகலைகிட்டேயும் விஷயத்தை ஷேர் பண்ணியிருப்பான்......."
"ஐயையோ! குடி முழுகிப்போச்சே! கொரோனாவைவிட, வேகமா பரவிடுச்சே, நிர்மலா, விமலா! ஏன்டீ, அமுக்குனு உட்கார்ந்து மௌனமாயிருக்கீங்க, பேசுங்கடீ..........."
" அக்கா! சொல்றோமேன்னு தப்பா எடுத்துக்காதே! உனக்கு எப்பவும் ஒரு அவசரபுத்தி! அப்பா - அம்மாவை நம்மோட அழைச்சிண்டு போறோம்னு சொன்னாமாதிரியே, அந்த காப்பாளர்கிட்டே, வீண் டம்பத்துக்கு, பெருமைக்கு, நாப்பது லட்சம் தரோம்னு சொல்லித் தொலைச்சுட்டே....."
" தப்புத் தான்டீ...மன்னிச்சுடுங்கடீ!"
" அண்ணா, மன்னியெல்லாம் பயன் தராது, சும்மா இல்லே, நாப்பது லட்சம்! ஆமாம், அதென்னக்கா! உனக்கு பத்து லட்சங்கறது, பத்து பைசா மாதிரி இருக்கா?"
" அல்லது, தினமும் இந்த 'சன் ஃபௌன்டேஷன்' கோடிக்கணக்கிலே டொனேஷன் தராப்பலே, நீயும் தந்துண்டிருக்கியா? சொல்லுக்கா!"
" உளறித் தொலைச்சுட்டேன், காப்பாத்துங்கடீ!"
" நம்ம நாலு பேருக்கும் ஒண்ணும் ஐடியா கிடைக்கலே, நம்ம சேர்த்துண்ட ஆம்பளைங்களை யோசனை கேட்போமா?"
" அதென்னடீ, நம்ம சேர்த்துண்ட ஆம்பளை, அது இதுன்னு தப்பா பேசறே? லட்சக்கணக்கிலே செலவு பண்ணிய கல்யாணத்திலே பலபேர் அறிய நம்ம கழுத்திலே தாலி கட்டின புருஷங்கடீ!"
" இப்ப அதுவா, பிரச்னை? தேர்தல் வாக்குறுதி மாதிரி, அள்ளி வீசிட்டே! கொரோனா ஊரடங்கு சட்டத்திலேகூட, அந்த காப்பாளர், நம்ம வீட்டுப் படியேறி வந்து, தினமும் கழுத்தறுப்பானே! என்ன சொல்றது, அவமானம்!"
"ஆங்! ஐடியா கிடைச்சுடுத்து......"