(Reading time: 6 - 12 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

" சொல்லு, சொல்லு!"

" இந்தக் கொரோனா பாதிப்பு இப்போ அப்போன்னு இன்னும் ஒரு வருஷத்துக்கு இழுக்கும்........"

" அது இழுத்தா நமக்கென்ன? நம்ம வழுக்கலுக்கு பதில்?"

" பொறுமையா கேளுடீ! இந்தக் கொரோனா பாதிப்பிலே, உலகமே ஓட்டாண்டி ஆயிடுத்து, ஷேர் மார்க்கெட் தலைகுப்புற கவிழ்ந்திடுச்சி, தொழில்கள் முடங்கிடுத்து, வியாபாரம் படுத்துடுத்து, பணப்புழக்கம் சுத்தமா நின்னுடுச்சி, அதனாலே........"

" அதனாலே.....?"

" அதனாலே, நம்ம பணமும் கைக்கு வர, ஒரு வருஷம் ஆகும், வந்தபிறகு தரோம், அதுவரையிலே, எங்க வீட்டு வாசற்படி ஏறாதேன்னு காப்பாளரிடம் கறாரா சொல்லிடுவோம்...."

" வாவ்! கிரேட்! அக்கான்னா அக்காதான்! ஜிந்தாபாத் அக்கா!"

"இப்ப அக்கான்னு கொண்டாடுவீங்க, அப்புறம் மக்கா நீன்னு மிரட்டுவீங்க! ரெண்டுமே வேண்டாண்டீ! ஆளை விடுங்க, பிறகு பேசுவோம்!"

மாநாடு இனிதே முடிந்தது!

சிறிது நேரத்திலே, நிர்மலாவுக்கு பிரைவேட் டிடெக்டிவ் விசுவநாதனிடமிருந்து போனில் அழைப்பு!

" சொல்லுங்க! எனி சக்சஸ்?"

" எனி சக்சஸ் இல்லே, ஆல் சக்சஸ்!"

" இருங்க, இருங்க, அக்காவையும் லைனிலே வரச் சொல்றேன்......"

" சொல்லு, நிர்மலா!"

" அக்கா! விசுவநாதன் லைனிலே பேசறார், கேளு.......சொல்லுங்க!"

"கண்டேன் சீதையைன்னு அனுமன் ராமரிடம் சொன்னாமாதிரி, சொல்றேன்,

கண்டேன் தம்பியை, உங்க தம்பியை, தங்கக் கம்பியை!"

" வெரி குட்!"

"நீங்க கொடுத்த பத்தாயிரத்துக்கு இவ்வளவுதான் சொல்லணும், சொல்லிட்டேன்!"

" மீதியையும் சொல்லுங்க!"

" ரொம்ப ரொம்ப நல்ல செய்தி காத்துக்கிட்டிருக்கு! கேட்டதும், துள்ளிக் குதிப்பீங்க, அதனாலே ஐம்பதாயிரம் ரூபாயோட வந்து, செய்தியை வாங்கிகிட்டு, வாழ்க்கை முழுவதும் சந்தோஷமா இருங்க!"

" வரோம், பணத்தோட வரோம், ஆனா ஐம்பதாயிரம் ரொம்ப அதிகம்! குறைச்சுக்குங்க!"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.