தொடர்கதை - வாழ்வே மாயம்! - 15 - ரவை
"நிர்மலா! நீ போனபிறகு என்னாச்சு தெரியுமோ?"
" சொல்லு, சொல்லு! நானே உனக்கு போன் பண்ணணும்னு இருந்தேன்..."
" நாம போட்ட நாடகம் கிராண்ட் சக்சஸ்! எதிர்பார்த்தது போலவே, அப்பா - அம்மாவே, 'வரலே, நாங்க இங்கேயே இருந்துக்கறோம்'னு சொல்லிட்டாங்க, ஆனா பாவம்! அவங்க மனசு ஒடிஞ்சு அழுதுகொண்டே சொன்னபோது, எங்களுக்கே மனசுக்கு கஷ்டமாயிருந்தது!"
" அதுக்குனு நாம என்ன பண்றது, சொல்லு! அவங்க அவங்களுக்குனு ஒரு குடும்பம், வரவு - செலவு, உறவு அமைந்தபிறகு, புதுசா சுமையை இழுத்துவிட்டுக்க முடியுமா? அதனாலேதான், பெற்றவங்களை காப்பாற்ற பொறுப்பை காலம் காலமா, மகனுக்கு கொடுத்தாங்க!"
"வேடிக்கை என்ன தெரியுமோ? ஒரு நிலையிலே, அக்கா ஆடிப் போயிட்டாங்க........."
" அவங்களுக்கு மனசு இப்படியும் அப்படியுமா ஊசலாடுது, ஒருசமயம் தர்மம், நியாயம்னு பேசி காரியத்தை கெடுத்துடறாங்க, மறுசமயம் 'ஐயையோ! தப்பு பண்ணிட்டோமே, எப்படி மீளுவதுன்னு' திகைக்கறாங்க!........அப்படித்தான் நாலுபேர் நடுவிலே, 'இன்னிக்கே அப்பா - அம்மாவை நாங்க அழைச்சிகிட்டு போகப்போறோம்'னு உளறிட்டாங்க........"
" நான் சொல்லவந்தது அது இல்லே, வத்சலா போட்ட போடுலே, எங்கே கடைசிலே தன் தலையிலே அவங்களை நிரந்தரமா காப்பாத்தற பொறுப்பு விழுந்துடுமோன்னு பயந்துட்டாங்க........"
இருவரும் வாய்விட்டு சிரித்தார்கள்.
அப்போது, இருவருக்கும் வத்சலாவிடமிருந்து கான்ஃபெரன்ஸ் கால் அழைப்பு வந்தது!
" ஏய் வத்சலா! ஜமாய்ச்சுட்டே! என்ன இருந்தாலும், போலீஸ் கமிஷனர் மனைவியாச்சே!"
" இப்படி இதையே சொல்லிச் சொல்லி என்னை கவுத்துறாதீங்க! உங்க கூட்டணியிலிருந்து என்னை கழட்டி விட்டுடாதீங்க! இப்ப நான் எதுக்கு போன் பண்ணினேன்னா, அந்த நாப்பது லட்சம் டுபாக்கூர் டொனேஷனிலிருந்து எப்படி கழளப் போகிறோம்? அதை நினைச்சே, ராத்திரி தூக்கம் போச்சு!"
" ஆமாம்.....கொஞ்சம் இரு, அக்காவையும் லைன்லே கூப்பிடறேன்...."
" குட் மார்னிங்! என்ன காலங்கார்த்தாலேயே, மாநாடா? சொல்லுங்க!"
" அக்கா! இப்ப எங்க கவலையெல்லாம், ஜம்பத்துக்கு பெருமையா நாப்பது லட்சம் நன்கொடை தரோம்னு சொல்லிட்டோமே, அதிலிருந்து எப்படி தப்பிக்கப் போகிறோம்?"
" பெரிய சிக்கல்லேதான் மாட்டியிருக்கோம், ஏன்னா, அங்கே தொடர்ந்து இருக்கிற நம்ம அப்பா - அம்மாவை அந்த காப்பாளர் பிடுங்கி எடுத்துடுவானே?"
" ஆமாம், அக்கா! நாம அங்கே போனதினாலேயும் அவங்களுக்கு மனசு கஷ்டம், இப்ப திரும்பி