(Reading time: 10 - 20 minutes)
Priyamaanavale
Priyamaanavale

"ஹ்ம்ம்...இம்ப்ரெஸிவ்...நீ இவ்ளோ பேசுவேன்னு எனக்கு தெரியாம போயிடுச்சு...ஒரு வகைல நீ சொல்றது எல்லாம் கரெக்ட் தான். ஆனா என்னோட பழிவாங்கும் படலம் வீட்ல இருக்காது. ஏன்னா பாட்டியோட பார்வையில இருந்து எதுவும் தப்பாது. அதனால தான் உன்னை கூடவே ஆபீஸ்க்கு கூட்டிட்டு போக போறேன். ஜஸ்ட் வெயிட் அண்ட் சி...இந்த ஒரு வாரத்துல நான் நடந்துக்கிட்டதை வெச்சு இவன் பழிவாங்கறதை பத்தி மறந்துட்டான்னு தப்பு கணக்கு போடாத" என இருக்கையில் இருந்து எழுந்து அவளை கடந்து போனவன், ஒரு நிமிடம் நின்று திரும்பி பார்த்தான்.

"அப்பறம், அந்த டிக்ஷனரியை எடுத்து வெச்சுக்க மறந்துடாத..." என்றுவிட்டு அங்கிருந்து வெளியேற, கோபத்தில் கையில் இருந்த புத்தகயித்தை கோபமாக எதிரில் இருந்த டேபிளில் வைத்தவள், "சரியான திமிரு" என மனதிற்குள் அவனை திட்டி கொண்டாள்.

படுக்கையில் இருந்த நித்யாவுக்கு உறக்கம் பிடிக்கவில்லை. அப்படி இப்படி புரண்டு படுத்தவள் எழுந்து அமர்ந்தாள்.

அவளுக்கு ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது. விசாலம் பாட்டிக்கு அவள் மேல் சந்தேகம் வந்திருப்பது. அவருக்கு தமிழை ரொம்பவே பிடித்திருப்பதும் அவளுக்கு புரிந்தது. அவர் முன் தன்னுடைய வேலைகள் எதுவும் நடக்காது. அதே போல அவருக்கு இனி கொஞ்சம் சந்தேகம் வந்தாலும் தன்னை இங்கிருந்து அனுப்பி விடுவார். வீட்டில் இருக்கும் வரை அடக்கி வாசிக்க வேண்டும்...அவளுக்கு முதலில் தமிழும் அலுவலகம் வருவதில் விருப்பம் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது யோசிக்கையில் அதுவும் ஒருவகையில் நல்லது தான் என தோன்றியது அவளுக்கு. தமிழை ராமிடம் இருந்து பிரித்தால் மட்டும் போதாது, ராம் மனதில் தான் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும். என்ன செய்யலாம்??? யோசனையுடன் எழுந்து பால்கனியை நோக்கி சென்றாள்.

பால்கனியில் இருந்த விளக்கை எரிய விட சென்றவள் பக்கத்து பால்கனியில் வெளிச்சம் தெரியவும் அந்த இருட்டில் மெல்ல எட்டி பார்த்தாள்.

வானத்தை வெறித்து நோக்கியபடி நின்று கொண்டிருந்தாள் தமிழ்செல்வி. அவளது முகத்திற் பார்க்கையில் அவள் ஏதோ ஒரு தீவிர யோசனையில் இருப்பது புரிந்தது நித்யாவுக்கு. பால்கனியில் இருந்து அறைக்குள் வந்தவளுக்கு நிச்சயம் ராம் மற்றும் தமிழுக்கு நடுவே எதுவோ ஒன்று இருப்பது புரிந்தது. அது என்ன என தெரிந்தால் ராமின் வாழ்க்கையில் இருந்து தமிழை வெளியேற்றி விட்டு அந்த இடத்திற்கு தான் வருவது சுலபம் என்று எண்ணியவள் முகத்தில் ஒரு சிரிப்புடன் படுக்கையில் விழுந்தாள்.   

தொடரும்

Next episode will be published on 8th Aug. This series is updated weekly on Saturday mornings.

Go to Priyamaanavale story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.