தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 01 - ஜெபமலர்
சென்னை புறநகர் பகுதி...
வசிப்பிடம் குறைவாக இருந்தாலும் வாகன நெரிசலுக்கு குறைவே இல்லை என்று அலுத்து கொண்டே நடந்தாள் ஜனனி.
நேரம் ஆவதை உணர்ந்த ஜனனி நடையில் வேகத்தை கூட்டினாள். கிட்டத்தட்ட ஆறடி உயரத்தை தொட்டிருக்கும் அவளது உயரத்திற்கு ஏற்ப அவளது நீளமான தலைமுடியும் அசைந்தாட அவள் நடப்பது பார்க்கும்போதே ஒய்யாரமாக இருந்தது.
அவளை ஆராய்ந்து பார்க்க அவசியமில்லை. சாதாரணமாக பார்த்தாலே அவளது எளிமையான தோற்றம் கூட கவர்ந்து இழுக்கக் கூடியதாக தான் இருந்தது.
அவளும் சாதாரணப் பெண்களைப் போல இயல்பாக உடை உடுத்தி இருந்தால் அவளது அழகு இன்னும் கூடுதலாகவே தெரியும். இயல்பாக பார்ப்போர் கூட நிச்சயம் திரும்பி பார்த்துவிட்டு தான் செல்வார்கள். அவர்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி. அந்த அளவு அழகோடு அமைதியும் ஒரு தெளிவும் அவள் முகத்தில் அளவுக்கு அதிகமாகவே இருந்தது.
கிட்டத்தட்ட 30 வயது இருக்கலாம். ஆனால் அவளோ தன்னை 40க்கும் அதிகமாக காட்டி கொள்ள விரும்புகிறாள் போல. குளோஸ் நெக் ஜாக்கெட், முழங்கை அளவையும் தாண்டி நீண்டிருக்கும் அவளது ஜாக்கெட்டின் கையளவு, நேர் வகிடு எடுத்து சாதாரணமாக பிண்ணி இருக்கும் அவளது தலை அலங்காரம், எளிமையான காட்டன் சாரி .
இதையெல்லாம் பார்க்கும் பொழுது அவள் அழகை குறைத்து காட்டுவதாக அவள் எண்ணிக்கொண்டாள் போல. ஆனால் அந்த எளிமையை அனேகரை திரும்பிப் பார்க்க செய்கிறது என்பதையும் அவள் கவனிக்கத் தவறிவிட்டாள்.
நடந்து போய் விடலாம் என்று எண்ணியது தவறாகப் போய் விட்டதே.. வீட்டில் இருந்து பார்க்கும் பொழுது ஆபீஸ் இருக்கும் தொலைவு குறைவாகவே பட்டது. ஆனால் அவள் நடக்கத் தொடங்கிய பிறகுதான் தெரிந்தது, கண்களால் பார்த்த அளவைவிட நடக்கும் பொழுது சற்று அதிகமாகவே இருக்கிறது என்று.
நாளையிலிருந்து இரண்டு மூன்று நாளைக்கு ஆட்டோவில் செல்ல வேண்டும் அதன் பிறகு ஊரில் இருக்கும் தனது டூவீலரை எடுத்து வந்து விட வேண்டும் என்று தனக்குள்ளே முடிவு செய்து கொண்டு இன்னும் வேகமாக நடக்கத் தொடங்கினாள்.
முதல் நாளே ஆபிஸிற்கு லேட்டாக செல்வது சரியாக இருக்காது. ஒரு பத்து நிமிடமாவது குறிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக சென்று விட வேண்டும் என்ற தீர்மானத்தோடு வேகமாக