நடந்து கொண்டிருந்தவளின் விழிகளில் அந்த சாலையோரமாக எழும்பிக்கொண்டிருந்த உயரமான கட்டிடம் பட்டது.
இன்னும் ஒரு வருடம் கூட தேவையில்லை. அதற்குள்ளாகவே இந்த இடமும் பரபரப்பான ஆட்கள் நிறைந்த இடமாக மாறிவிடும் என்று நினைத்து கொண்டே அந்த உயர்ந்த கட்டடத்தை பார்த்துக் கொண்டே நடந்தாள் ஜனனி.
கட்டிடத்தையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவளின் கண்கள் அவளுக்கு முன்பாக நடந்து கொண்டிருந்த நிகழ்வை கவனித்த தவறிவிட்டது.
திடீரென்று அவளது விழிகள் சாலையோரம் திரும்ப தனக்கு முன்னே கீழே விழப் போன ஒருவனை கண்டதும் ஓடிச்சென்று தாங்கிக் கொண்டாள் ஜனனி.
இயல்பாக கீழே விழவில்லை. அவனை யாரோ தள்ளி விடுவதை பார்த்திருந்த ஜனனி யார் என்று பார்ப்பதற்காக அவனைத் தாங்கிக் கொண்டே விழி உயர்த்தி பார்த்தாள். அங்கே பிளாக் கலர் பிஎம்டபிள்யூ காரில் ஒரு பெண் ஏறிக்கொண்டிருந்தாள். பார்வையிலேயே அவள் கோடீஸ்வரி என்பது நன்றாக தெரிந்தது. அவள் முகத்தை காணவில்லை தான். அவளது அந்த மென்மையான கரங்கள் மட்டுமே அவள் ஒரு பெண் என்பதை அவளுக்கு காட்டியது .
அதற்குள் அவளது கைப்பிடியில் இருந்து எழும்பியவன் போகாதே ஸ்வேதா... ப்ளீஸ் என்று அரற்றி கொண்டே அவள் காரை நோக்கி ஒரு அடி முன்னால் எடுத்துவைக்க அதற்குள் அந்த கார் அந்த இடத்தைவிட்டு மறைந்து இருந்தது.
போகாதே ஸ்வேதா போகாதே ஸ்வேதா என்று அழைத்துக் கொண்டு இருந்தபோது அவன் முகத்தில் இருந்த ஏக்கம் இயலாமை ஜனனியின் கருத்தைக் கவர்ந்தது. அவனைப் பார்த்தவள் அங்கிருந்து செல்ல வேண்டும் என்பதை கூட அறியாமல் அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள்.
ஸ்வேதா அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள் என்பதை உணர்ந்த அவன் கோபம் மொத்தமாக ஜனனி மீது திரும்பியது.
அவளைப் பார்த்தபோது அவன் முகம் ஆக்ரோஷமாக இருந்தது. அவள் ஏன் என்று புரியாமல் நிற்க, ஏய் என்னடி நெனச்ச, நீ பிடிக்கலைன்னா நான் விழுந்திடுவேனு நினைச்சியா... இப்படியெல்லாம் வந்து என்னை மயக்கி விடலாம் என்று நினைத்தாயா... ஆள பார்த்து மயங்குறவன் இல்லடீ நான்... போடீ... பணம் இருந்தால் போதுமே பின்னாடியே வருவீங்களே... உன் அழகில் மயங்கிறவன் நான் இல்லை, கொஞ்சம் அழகு இருந்தால் போதுமே, எவன் பணக்காரன், எவனை வளைத்து போடலாம் என்று அலைறிங்களே என்று வாய்க்கு வந்தவாறு அவளை ஒருமையில் திட்டிக் கொண்டே அந்த இடத்தை விட்டு அகன்றான்.
அவன் திட்டியது அவளது செவியில் விழுந்தாலும் அவன் மீது இருந்து வந்த ஆல்ககால்