தோழி சந்தியாவிடம் மட்டுமே. ஆனால் நேற்றைய தினம் தானாக வந்து தன்னிடம் பேசிய ஸ்வீனா நினைவும் வந்தது. நைஸ் கேர்ள் என்று வாய் விட்டு கூறியவள் சிரிப்புடன் வேலையை தொடர்ந்தாள்.
முதல் நாள் எந்த பிரச்சனையும் இல்லாமல் முடிந்தது. வீட்டுக்கு வந்து படுத்தவளுக்கு காலையில் பார்த்த அவனின் நினைவு வந்தது.
அவன் பேசிய வார்த்தைகளும் நினைவு வந்தது. அவனது திமிரான பேச்சும் குடித்து விட்டு அவன் செய்த ரகளையும் நினைத்து பார்க்கும் போதே அவன் மீது வெறுப்பை ஏற்படுத்தியது. அவள் முகம் அருவருப்பில் சுருங்கியது..
சற்று நேரம் அமைதியாக தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் குடிகாரன்கிட்ட திட்டு வாங்கும் அளவு என் நிலை ஆகிவிட்டதா என்று நினைக்கும் போதே தோழியின் அழைப்பு வந்தது. மகிழ்ச்சியோடு பேசி முடித்தவள் நிம்மதியாக உறங்கியும் போனாள்.
அடுத்த நாளில் இருந்து இரண்டு நாட்கள் ஆட்டோவில் சென்றவள் அதன் பிறகு டூவிலரில் செல்ல ஆரம்பித்தாள்.
பதினைந்து நாள் கடந்து இருந்தது. வேலை மேல் இருந்த பயம் நீங்கி இயல்பாக செயல்பட தொடங்கினாள். அப்போது தான் கவனித்தாள். மேனேஜர் எல்லாரையும் விட தனக்கு பல சலுகைகள் செய்து இருப்பது புரிந்தது.
ஏனோ அவளுக்கு அப்படி செய்ததால் மேனேஜர் மீது நல்ல அபிப்பிராயம் இல்லை.
மேனேஜர் விஷயத்தில் சற்று கவனமாகவே இருந்தாள். முடிந்தவரை அவரை சந்திப்பதையும் அவரோடு பேசுவதையும் தவிர்த்து வந்தாள்.
கிட்டத்தட்ட மேனேஜருக்கும் அவளை விட ஐந்து வயது வேண்டுமென்றால் வித்தியாசம் இருக்கலாம். அவனின் பார்வையும் அவன் செய்கிற ஒவ்வொரு செயலும் அவள் மீது அவனுக்கு அக்கறையை இருப்பதை தெரிவித்த தாகவே இருந்தது. ஆனால் அதையெல்லாம் கவனிக்காதது போல் இருந்தாலும் அதை கவனித்துக் கொண்டிருந்ததால் ஜனனிக்கு அவன்மீது கோபம் வந்தது.
நேரம் கிடைக்கும்போது அதை அவரிடம் வெளிப்படுத்திவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தாள்.
அதற்கான வாய்ப்பும் வந்தது. ஒரு நாள் வேலை எல்லாவற்றையும் முடித்து விட்டு திரும்பும் போது மேனேஜரை சந்திக்க வேண்டியதாகியது. அதனால் அறைக்கதவை தட்டி விட்டு உள்ளே சென்றாள் ஜனனி.
தனிமையில் வேலை விஷயமாக பேசி முடித்துவிட்டு கிளம்பும்போது எழும்பி நின்றவள், சார் வேலை விஷயமாக எது வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் பர்சனலாக எனக்கு உதவி