"காபிக்கு பில் தந்திடாதம்மா…" ஷீலா சிரித்தபடியே காபியை எடுத்துக் கொண்டார்.
"நீயும் எடுத்துக்கோ ஜெமி…" ரேச்சல் அவனிடம் ட்ரேவை நீட்ட… அவனுடைய பார்வையில் தெரிந்த மாற்றம் ஷீலாவை யோசிக்க வைத்தது. அவளை சினேகமாக பார்க்கமல் ஆராய்ச்சி பார்வை பார்க்கின்றானே…
"மதியம் சாப்பாடுக்கு மீன் சம்பலும்… தேங்காய் சாதமும் செய்யப் போறேன்… உனக்கு வேறு எதுவும் வேண்டுமா?"
"உனக்கு சமைக்க தெரியுமா ரேச்சல்… " கசந்த குரலில் கேட்டான்.
"ம்… எனக்கு தெரியுது… கிச்சன்குள்ள போனதுமே மடமடனு ரெஸிப் நினைவுக்கு வந்திடுது… சமைக்க ஆரம்பிச்சிடறேன்…"
"ஓ…."
"ரேச்சல் நீ போய் உன்னோட வேலையை பாரும்மா" அவளை அனுப்பிவிட்டு..
"ஜெமி… ஏதோ வித்தியசமா நடந்துக்கற… ரேச்சல் இப்போதுதான் குணமாகிட்டு வருகிறாள்… அவளை டிஸ்டர்ப் பண்ணாதே"
"உங்களிடம் கொஞ்சம் பேசணும்…"
"சொல்லு"
"ரேச்சல்ட்ட நீங்க ரொம்ப குளோஸாயிட்டீங்க…"
"அதுல தப்பு இல்லையே…"
"அவளிடம் இருந்து கொஞ்சம் விலகி இருங்க.. பழையபடியே.."
"ஏம்பா…? நான் எப்போதும் அவளிடம் இருந்து விலகி நின்றதில்லை. அவள்தான் என்னிடம் வர மாட்டாள்… இப்பகூட அவள்தான் பிரியம் காட்டுகிறாள்…"
"அது பின்னால் உங்களை பாதிக்கலாம்…"
"அவளுக்கு நினைவு திரும்பியதும் என்னிடம் பழையபடி நடந்துக்கலாம்… அப்படினு சொல்றியா…"
"ஆமாம்… உங்களால் அதை தாங்க முடியாது ஆன்ட்டி…"
"உண்மைதான் ஜெமி… என் வாழ்க்கை நீண்ட நாட்களாக தனித்து விடப்பட்டிருந்தது. எனக்கான அன்பிற்காக என் மனம் ஏங்கி கொண்டு இருந்தது. இப்போது ரேச்சல் காட்டும் பாசம் என் தாயே மீண்டும் என்னிஞம் வந்தது போல இருக்கிறது. இது தற்காலிகமானதுதான் என்று எனக்கு தெரியும். ஆனால் அதை விட்டு விலக மனம் இல்லை" அவருடைய வேதனை புரிந்து கொண்டு...
"ஆன்ட்டி… நீங்கள் அவளுக்கு ஹெல்த் சரியில்லாதபோது ரொம்ப கேர் எடுத்து இருக்கீங்க.