சந்தோசமாக கடக்கலாம்" என்று சொன்னார்.
" சரிமா நான் லஞ்ச் தயார் செய்து கொண்டாரேன். சந்தோசமா சாப்பிடலாம்" என்று சொல்லி ரேச்சல் நகர்ந்தாள்.
ஜெமியிடம் திரும்பிய ஷீலா…
" ஜெனி நீ போய் குளிச்சுட்டு கொஞ்சம் ஓய்வெடுத்துட்டு வா. அப்புறமாக ஸ்டேஷனுக்கு போறது பற்றியெல்லாம் பேசலாம்" என்று அனுப்பி வைத்தார்.
அவர் சொல்வதை ஏற்றுக் கொண்டு தன்னுடைய அறைக்கு ஜெமி சென்று குளித்து விட்டு உடை மாற்றி வந்து படுக்கையில் அமர்ந்த பொழுது அவனுக்கு நாகர்கோவில் நடந்தவை நினைவிற்கு வந்தன.
மேத்யூஸின் கம்ப்யூட்டரில் அவர் பாஸ்வேர்டு எதுவும் தராமல் இருந்ததால்… அவனால் அந்த கம்ப்யூட்டரை இயக்க முடிந்தது. அதிலிருந்து அவன் ஜிமெயிலை தொடர்பு கொண்ட பொழுது அதில் அவனுக்காக அவன் டிராப்ட் செய்து வைத்திருந்த ஒரு ஃபைல் கிடைத்தது. அதில் ஆடியோ இருந்தது. அவன் அந்த ஆடியோவை கேட்டு பார்த்த பொழுது அவர் பேசி இருந்தது புரிந்தது.
அனேகமாக மருத்துவமனையில் இருந்த பொழுது அவர் பேசி இருக்க வேண்டும். ஏனெனில் விபத்துக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து அவர் வெளியே வரவே இல்லை. முதல் இரண்டு நாட்கள் நன்றாக இருந்த அவர்… பிறகு உடல் நலம் சரி இல்லாமல் படுத்து விட்டார். திடீரென்று வந்த ஹார்ட் அட்டாக்கில் அவர் இறந்து விட்டார். அதனால் அவர் மருத்துவமனையில் இருந்த பொழுதுதான் இதை செய்திருக்க வேண்டும் என்று நினைத்தான்.
அந்த ஆடியோவின் அவர் சொன்ன விஷயங்கள் முற்று பெறாமல் இருந்தது. அடுத்த ஆடியோவை பேச அவர் முயற்சித்து இருக்க வேண்டும். ஆனால் முடியவில்லை போலும். அதனால்தான் அது டிராப்டிலேயே இருந்தது. அந்த ஆடியோவில் அவர் பேசி இருந்ததை மீண்டும் நினைவு கூற ஆரம்பித்தான்.
" டியர் ஜெமி… நான் உனக்காக இந்த ஆடியோவை பதிவு செய்கிறேன். இதில் இருப்பதை நீ கேட்டு எனக்கு உதவி செய்ய வேண்டும். ஏனெனில் இந்தப் பதிவு என்னுடைய கடைசி ஆசையாக கூட இருக்கலாம். அதற்கு முன் அந்த விபத்து நடந்த அன்று என்ன நடந்தது என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நான் செய்த தவறை நீ சரி செய்ய முடியும் என்று நம்புகிறேன்" என்று விளக்க ஆரம்பித்து இருந்தார்.
அவருடைய அன்னை இறந்த பிறகு ஷீலாவுடன் தனிமையில் இருப்பதை தவிர்க்க எண்ணிய ரேச்சல், கடந்த சில வருடங்களாக சென்னையில்தான் இருந்தாள். அவ்வப்போது மேத்யூஸ் மட்டுமே சென்று பார்த்து வருவார். ஆனால் இப்போதுதான் அவளை நாகர்கோவிலுக்கு