அறிந்த தன்சிகா மிகவும் ஆர்வமாக அவளுடன் பேச்சை வளர்த்துக் கொண்டே சென்றாள்.
அன்று திங்கள் கிழமை என்பதால் ஆபிசுக்கு ஒரு நாள் விடுமுறை கேட்டிருந்தாள் ஜனனி. அன்று முழுவதும் தன்சிகாவுடன் இருக்க அவளும் மகிழ்ச்சியாக அந்த நாளை கழித்துக்கொண்டிருந்தாள்.
காலை இருவரும் டிபன் சாப்பிட்டதும் அருகிலுள்ள பார்க்க்கு அழைத்துச் சென்றாள் ஜனனி.
இதுவரை தன் மனதில் அடக்கி வைத்திருந்த கவலை கோபம் வருத்தம் எரிச்சல் எல்லாவற்றையுமே தள்ளிவிட்டு ஒரு குழந்தையாகவே மாறி தன்சிகா உடன் விளையாடத் தொடங்கினாள் ஜனனி.
பசி வயிற்றைக் கிள்ள அப்பொழுதுதான் நேரம் கடந்துவிட்டதை உணர்ந்தவர்கள் மீண்டும் அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு வந்தனர். காலையிலேயே மதியத்திற்கு தேவையான உணவை சமைத்து வைத்திருந்தாள் ஜனனி.
தன்ஷிகாவுக்கு ஊட்டி விட்டு கொண்டே சாப்பிட தொடங்கினாள் ஜனனி. ஜனனியின் அன்பான பேச்சும் கதை சொல்லிக்கொண்டே ஊட்டி விடும் விதமும் மிகவும் பிடித்துப்போக வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாகவே சாப்பிட்டாள் தன்சிகா. அதோடு ஜனனி உடன் மிகவும் ஒட்டி கொண்டாள் தன்சிகா.
மதியானம் சாப்பாட்டை முடித்ததும் இருவரும் வீட்டிற்குள் அமர்ந்து சிறுசிறு விளையாட்டுகளை விளையாட அதோடு புத்தகங்களை வைத்துக்கொண்டு ஜனனி தன்சிகாவிற்கு கதை சொல்ல அதை எல்லாம் ஆர்வமாக கவனித்தாள் தன்சிகா.
சாயங்காலம் ஜனனி கொடுத்த சுவைமிகுந்த தேநீர் அருந்திய உடன வாக்கிங் போகலாமா என்றாள் தன்சிகா.
உடனே அங்கிருந்து நடந்து அருகில் உள்ள மார்க்கெட்டுக்கு சென்றார்கள். தேவையான காய்கறிகளை வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியாக வீடு திரும்ப இரவு உணவுக்காக ஜனனி சமையல் செய்தாள்.
அவள் சமைத்தாலும் கவனமும் பேச்சும் தன்சிகாவிடம் இருந்தது. சமைத்துக் கொண்டே தன்னையும் கவனித்துக்கொள்ளும் ஜனனியை பார்க்க ஆச்சரியமாக இருந்தது. நீங்கள் அம்மா மாதிரியே இருக்கீங்க என்றாள் ஆர்வமிகுதியால்.
அவள் அம்மா என்று சொன்னதும் ஏனோ ஜனனிக்கு சற்று கோபமாகவும் வருத்தமாகவும் இருந்தது. இப்படி ஒரு அழகான குழந்தையை விட்டுவிட்டு இவர்களெல்லாம் பிசினஸ் பிசினஸ் என்று ஓடி எதைத்தான் சாதிக்க போகிறார்களோ என்று எண்ணிய தன்ஷிகா அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை. ஆனாலும் மனதில் ஒரு பக்கத்தில் அவளது அம்மா அப்பா