என்னம்மா சீன் கிரியேட் செய்கிறாள்... ரொம்ப கவனமாக தான் இருக்க வேண்டும் என்று எண்ணியவன் மண்டபத்திற்குள் நுழைந்தான்.
குறிப்பிட்ட நேரத்தில் சரியாக பஸ் ஸ்டாண்டிற்கு வந்ததால் தனக்கான பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டாள். தனியாக அமர்ந்து இருந்ததால் மனம் கடந்த ஒரு வாரமாக தன்சிகா உடன் செலவிட்டதை நினைத்துக் கொண்டே இருக்க அவளது நினைவுகளின் முடிவில் அந்த போதை கார பணக்காரன் வந்து நின்றான். அவன் நினைவுகள் வந்ததுமே அவன் பெயர் என்னவாக இருக்கும். முதல் இருமுறை சம்பந்தம் இல்லாமல் திட்டு வாங்கினாலும் அதன் பிறகு அவனை பலமுறை பார்த்திருக்கிறாள்.
ஆனால் அவன் எப்பொழுதுமே மற்றவர்களிடம் ஜென்டிலாக தான் நடந்து கொண்டிருக்கிறான். அப்படி இருக்கும் போது ஏன் என்னை மட்டும் திட்டினான் என்று யோசித்தாள். ஆனால் பதில் தான் கிடைக்கவில்லை.
தொடர்ந்து அவனையே பற்றி யோசித்ததால் அவன் பணக்காரன் மட்டுமல்ல பெரிய பிசினஸ் மேன் ஆக தான் இருக்க வேண்டும் என்று அவளாகவே ஒரு முடிவுக்கு வந்தாள்.
ஏனென்றால் அவனது பேச்சில் அத்தனை ஆளுமையும் அவனது கண்களில் அத்தனை கம்பீரமும் நிமிர்ந்த நடையும் அப்பப்பா பெரிய ஆளு தான் என்று அவளையே சொல்ல வைத்து இருந்தான்.
இவன் பின்னால் அநேக பெண்கள் சுற்றி வருவதை பார்த்தவள்அதை போல நானும் ஒருத்தி என்று நினைத்துக்கொண்டுதான் அப்படி திட்டி விட்டான் போல என்று எண்ணி கொண்டாள்.
ஆனால் அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை.. இந்த உலகத்திலேயே கடைசி ஆண் மகன் அவன் என்றாலும் நான் அவனை கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று.. பாவம் இதையெல்லாம் அவன் எப்படி புரிந்து கொள்ள முடியும் என்று சொல்லி அப்படியும் இப்படியுமாக யோசித்தவள் அவன் பெயர் என்னவாக தான் இருக்கும் என்று யோசித்தவள் அவளை அறியாமலேயே அவனுக்கு ஒரு பெயர் வைத்து விட்டாள்.
அவள் மனதில் நினைத்ததை மனதில் சொல்லிக் கொள்வதாக நினைத்து உச்சரிக்க அவள் உதடுகள் சத்தமாக உச்சரித்த விட்டன. (Pothai Kara Pana Karan) பீகே ஸ்கொயர்( pk²) என்று.
அவள் பிகே ஸ்கொயர் என்று சொன்னதை கேட்ட அருகில் இருந்த பெண்மணி அவளது தோளை தட்டி நீங்க மேத்ஸ் டீச்சரா இல்லனா கெமிஸ்ட்ரி டீச்சரா வந்ததிலிருந்தே மைண்ட்ல ஏதோ பெரிய கணக்குப் போட்டுகிட்டு இருக்கீங்க போல... பீகே ஸ்கொயர் அப்படின்னா என்ன என்று வினவ அப்பொழுதுதான் அவளுக்கு உறைத்தது. மனதில் சொல்லிக் கொள்வதாக நினைத்து அவனது பெயரை நிஜமாகவே சொல்லி விட்டோமா என்று புன்சிரிப்புடன் சிரித்து