மனதில் நினைத்ததை வெளிப்படையாக கூற அப்பா ஜானு பத்தி தப்பா பேசாத... மத்தவங்கள தப்பா பேசக்கூடாது.. முன்ன பின்ன தெரியாதவங்கள தப்பா நினைக்க கூட செய்ய கூடாது என்று சொல்லி கொடுத்துட்டு நீங்களே பேசினால் அது சரியா... நீங்கள் இன்னும் ஜானுவிடம் பேசவே இல்லையே... பார்க்க கூட இல்லையே... அப்புறம் எப்படி ஜானுவை பற்றி தப்பா சொல்லலாம் என்று கேட்க அப்போது தான் நிலையை அறிந்தவன் தனுக்குட்டி ஏதோ கோபத்தில் பேசி விட்டேன். சாரி டா செல்லம்... உன்னோட ஜானு ரொம்ப நல்லவங்க ஓகேவா என்று குழந்தையை சமாதானம் செய்தான். ஆனாலும் அவன் மனதில் கோபம் கொப்பளித்து கொண்டு தான் இருந்தது.
தனுவிற்கு தெரியாமல் அஸ்விட் ஸ்வீனாவைபார்த்து முறைத்து விட்டு அங்கிருந்து கடந்து சென்றான் ஜனார்த்தனன். தாங்கள் செயலைத் தொடங்கிவிட்டாலும் தங்கள் மனதில் நினைத்தபடியே காரியம் நடந்து கொண்டிருப்பதை அறிந்த அவர்கள் ஒரு வெற்றி புன்னகையை உதிர்த்துவிட்டு தங்கள் மற்ற வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
பொழுது விடிவதற்காக காத்திருந்தான் ஜனா. ஏனோ தன்சிகா நேற்று கேட்ட அந்த கேள்வியே அவன் மனதை குடைந்து கொண்டிருந்தது. அந்தக் கேள்வியில் இருந்தே தன்சிகா மனதில் ஜனனி எவ்வளவு ஆழமாக பதிந்து இருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டான் ஜனா.
அதனால் ஏற்பட்ட கோபம் ஸ்வீனா மீது திரும்பியது. அதனால் ஸ்வீனாவை பார்த்து நிச்சயம் பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டே படுத்தவனுக்கு உறக்கம் வர மறுத்தது. எப்பொழுது விடியும், ஸ்வீனாவை சந்திக்கலாம் என்று காத்து கொண்டு இருந்தான் ஜனா.