மழுப்பி விட்டு நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று அவர்களது பேச்சை வேறு பக்கமாக திருப்பி விட்டாள் ஜனனி.
பேருக்காக சிறிது நேரம் பேசிவிட்டு அவரவர் வேலையை பார்க்க தொடங்க ஜனனியின் நினைவு மீண்டும் அவன் பக்கம் செல்ல தன் மனதை கட்டுப்படுத்தியவள் தன் தோழி சந்தியாவுடன் செலவழித்த அந்த இனிமையான நாட்களை நினைத்து மகிழத் தொடங்கினாள்
பங்ஷனில்...
ஜனனியின் கைப்பற்றி இழுத்து அவளை காப்பாற்றிய அந்த போதை கார பணக்காரன் இல்லை இல்லை அந்த பிகே ஸ்கொயர் அஸ்விட் ஜோடியின் நிச்சயதார்த்த மண்டபத்திற்குள் நுழைந்தான்.
வேகமாக உள்ளே வந்தவன் ஸ்வீனாவிடம் சென்று தன்சிகா எங்கே என்று கேட்க அவளை மெரினா வைத்திருக்கிறாள். அதோ அந்த அறையில் போய் பாருங்கள் தனா அண்ணா என்று சொன்னாள்.
சரி என்றவன் அறையில் இருந்த மெரினாவை பார்க்க சென்றான். அங்கு அவள் தன்சிகாவுடன் விளையாடி கொண்டு இருந்ததை பார்த்து உள்ளே நுழைந்ததும் அவனை பார்த்த தனு குட்டி அப்பா என்று சொல்லி அவனிடம் தாவி கொண்டாள்.
ஜனார்த்தனன் அண்ணா வந்து விட்டீர்களா என்று தனாவை பார்த்து கேட்டாள் அந்த மெரினா.
ஆமாடா மெரினா... கொஞ்சம் இல்ல ரொம்பவே லேட்டாயிடுச்சு. சாரிடாமா... என்னால நீயும் பங்க்ஷனை என்ஜாய் பண்ண முடியாம போயிடுச்சு என்றான் ஜனார்த்தனன்.
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை அண்ணா.. தனுகுட்டி கூட விளையாடுவது எனக்கு ஒன்னும் கஷ்டம் இல்லை என்று சொன்னாள் மெரினா.
சிறிது நேரம் ஜனார்த்தனன் உடன் பேசி விட்டு அங்கிருந்து சென்று விட்டாள் மெரினா.
அப்பொழுதுதான் தன் பொண்ணு அணிந்திருந்த அந்த டிரஸை கவனித்தான் ஜனார்த்தனன். இது அவள் போட்டு இருக்கிற மாதிரியே இருக்கிறது என்று யோசித்தவன் ஒருவேளை அவளை தனு பார்த்திருக்கலாமே... என்று பலவிதமாக யோசித்த அவனுக்கு மனதில் ஒரு பொறி தட்டியது.
ஒருவேளை இத்தனை நாள் தனு சொல்லிக் கொண்டே இருக்கும் ஜனனி அவளாக தான் இருக்குமோ என்று எண்ணியவன் குட்டிமா நீ போட்டிருக்கிற டிரஸ் யார் எடுத்துக் கொடுத்தார்கள்.. ஸ்வீனா அத்தையா என்றான்.
இல்லை இல்லை அப்பா ஜானு தான் எடுத்து கொடுத்தாங்க.
ஓ...என்று யோசித்தவன் நான் நினைத்தது சரியாகத்தான் இருக்கிறது என்று