எண்ணிக்கொண்டான். ஆனாலும் அதை முழுவதுமாக உறுதி செய்து கொள்வதற்காக உன்னோட ஜானுவும் இதே மாதிரி டிரஸ் தான் எடுத்தாங்களா தனுகுட்டி என்றான் அவன்.
ஆமா நான் தான் ஜானுவையும் இதே மாதிரி டிரஸ் எடுக்க சொன்னேன். ரொம்ப அழகா இருந்தாங்க... மம்மி சொல்கிற ஃபேரிடேல் ஸ்டோரில வர்ற அந்த ஃபேரி கேர்ள் மாதிரியே இருந்தாங்க தெரியுமா என்றாள் தன்சிகா.
என் பொண்ணு கூட என்ன மாதிரியே நினைத்து இருக்கிறாளே... உண்மையிலேயே அவள் ஃபேரிகேர்ள் தான் என்று எண்ணியவன் தன் மனம் யோசிப்பதை கண்டு இது என்ன முட்டாள்தனம்... அவள் என்னை மயக்க வந்திருக்கிற மாயமோகினி... அவளை கண்டு நான் மயங்கி விடமாட்டேன் என்று தன் மனதில் உறுதியாக சொல்லிக் கொண்டான்.
ஜனா என்று அழைக்கப்பட்ட அந்த ஜனார்த்தனன் நண்பர்களால் ஜனா என்று அழைக்கப்பட்டாலும் ஏனோ வீட்டில் உள்ள அனைவருக்கும் அவன் "தனா" ஆக இருந்தான்.
பங்ஷன் முடிந்து ஒவ்வொருவராக விடை பெற்று செல்ல தன்சிகாவுக்கு சாப்பாடு கொடுக்கலாம் என்று எண்ணியவன் சாப்பிடலாமா தனுகுட்டி என்றான் ஜனார்த்தனன்.
அப்பா ஜானு ஏற்கனவே எனக்கு சாப்பாடு கொடுத்திட்டாங்க. எனக்கு பால் மட்டும் கொடுத்தால் போதும் என்று சொல்ல அவனுக்கு சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது. சரி என்றவன் அவளுக்காக பாலை வாங்கிக் கொடுத்தான்.
சிறிது நேரத்தில் பங்க்ஷன் முடிந்து அனைவரும் திரும்பி சென்றுவிட அஸ்விட் ஸ்வீனாவை தேடி சென்றான் ஜனார்த்தனன்.
ஸ்வீனாவை பார்த்ததும் தாவிக் குதித்து அவளிடம் சென்றாள் தன்சிகா.
ஜனனி தன்னைப் பார்த்துக் கொண்ட விதத்தை தன் மழலை மொழியில் அழகாக விவரித்து கொண்டிருந்தாள் தன்சிகா. அதை ஆர்வமாக ஸ்வீனா கேட்டதோடு அஸ்விட் ஜனார்த்தனனும் கேட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் அவள் முடிவில் அப்படி ஒரு கேள்வியை கேட்டால் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
அப்பா பேசாம ஜானுவை அம்மாவா நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போய் விடலாமா... குட் மாம் ஆக இருப்பாங்க. என்னோட அம்மாஇனி என்னிடம் வர மாட்டார்கள் என்று நீங்கள் தானே சொன்னீர்கள். நம்மளை ஜானு நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்று மழலை மொழியில் தன்சிகா சொல்ல அதைக் கேட்ட மூவரும் அதிர்ந்து போனார்கள்.
கோபத்தில் அறிவை இழந்த ஜனார்த்தனன், ஓ... என் பொண்ணை மயக்கி என் பணத்தை சுருட்ட தான் முடிவு பண்ணிட்டு நல்லவளா வேஷம் போடுகிறாளோ அந்த ஜனனி என்று