சொல்கிறாளா..
ஸ்வீனா என்று சற்று அதிர்ச்சி கலந்த கோபத்துடன் கத்தினான் ஜனா...
என்ன அண்ணா தங்கச்சி கிட்டே சத்தமெல்லாம் உயர்த்துகிற அளவுக்கு ஸ்வேதா முக்கியமா போய்ட்டா உங்களுக்கு அப்படி தானே...
அப்படி இல்ல... ஸ்வேதா, ஸ்வேதா என்னை காதலித்தது உண்மை அவள் என்னை பணத்திற்காக காதலிக்கவில்லை.. நீ ஒரு முறை கூட அவளிடம் நேரில் பேசியது இல்லை.. அப்படி இருக்க நீ அறியாத அவளைப் பற்றி தவறாக பேசுவது சரியில்லை..
அறியாத ஒருவரைப் பற்றி தவறாக பேசுவது தவறு என்று சொல்லுகிற நீங்கள் உங்களை காப்பாற்ற வந்த ஒரு பெண்ணை தவறாக பேசியது தவறு இல்லையா... இன்னும் அவளை பற்றி தவறாகவே நினைத்து கொண்டு இருப்பது தவறு இல்லையா...
பதில் சொல்ல முடியாமல் அமைதியாக நின்றாலும் அவன் மனம் அவனிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தது. அப்படி என்றால் அவளை திட்டியதை இவளிடம் சொல்லி விட்டாளா என்று யோசனையாக ஸ்வீனாவை பார்க்க அவளோ ஜனனி சொல்லவில்லை... நானும் அஸ்ம் ஆபிஸ் வரும் போது நேரில் பார்த்தோம் என்றாள் ஸ்வீனா.
மீண்டும் அவன் அமைதியாக இருக்க ஸ்வீனா பேச்சை தொடர்ந்தாள். அப்படி என்றால் ஜனனி தனு குட்டியின் மீது காட்டும் பாசம் பணத்திற்காக மட்டும் என்று எப்படி சொல்கிறீர்கள் அண்ணா..
இப்போல்லாம் அப்படித் தானே நடக்குது. அதனால் பொதுவா சொன்னேன் என்றவன் அவன் சந்தித்த கசப்பான சம்பவங்களை நினைத்து பார்த்தான்.
அவன் சொல்வதில் உண்மை இருந்தாலும் இப்போது ஆம் என்று தலையாட்டினால் எல்லாம் வீணாக போய்விடும் என்று நினைத்தவள், ஆஹா நாலு பேரு சொல்றத வச்சு பொதுவா சொல்ற அளவுக்கு போயிட்டீங்க.. எதையும் யோசித்து முடிவு செய்கிற செய்வதில்லை... அப்படித்தானே என்றாள்.
அப்படி இல்லடா... என்றவன் எதையோ சொல்ல நினைத்து அப்படியே விட்டு விட்டான். ஸ்வேதா ரொம்ப நல்லவள் தான்.. ஆனால் தனுக்குட்டியை பாத்துக்க முடியாதுன்னு சொல்லி என்கிட்ட இருந்து விலகிப் போய் விட்டாளே தவிர பணத்துக்காக என்னை விட்டு விலகவில்லை என்றான்.
ஆமா... இப்ப கூட உன்னோட பணம் இரண்டு மடங்கு அதிகமாக தானே இருக்கு... அப்புறம் எப்படி பணத்துக்காக உன்னை விட்டு விலகினால் என்று சொல்ல முடியும்ல என்று ஒரு வார்த்தையை முடிக்காமல் ஃபைலை மூடி விட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
ஆனால் உன்னை ப்ரேக் செய்தவள் நார்த் சைட் பிஸினஸ் மேனை சீக்கிரம் திருமணம் செய்ய