(Reading time: 16 - 32 minutes)
Ullam kollai poguthe
Ullam kollai poguthe

இல்லை. சாதாரண மனுஷி என்று சொல்லி விட்டு அங்கிருந்து வெளியேறினாள்.

அதன் பிறகு அவள் பேசவில்லை. இப்பொழுது யாரையோ திருமணம் செய்து கொள்ள போவதாக தகவலும் வந்தது. அதன் பிறகு அவளை சந்திக்கும் போதெல்லாம் அவமானப்படுத்தி அனுப்பி விட்டாள்.

இனி ஸ்வேதா திரும்பி வர போவதில்லை என்று தெரியும். என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருக்கும் போது ஸ்வீனா தன் பொருட்களை எடுக்க மீண்டும் அறைக்கு வந்தாள்.

ஸ்வீனா...

பதில் சொல்லாமல் திரும்பி பார்த்தாள்.

உன் முடிவே என் முடிவு. ஆனால் ஒரு கன்டிஷன் என்று சொல்ல என்ன என்பது போல ஸ்வீனா பார்க்க அஸ்விட்ம் பார்த்தான்.

அவளை திருமணம் செய்து கொள்ள எனக்கு சம்மதம். ஆனால் என்னால் ஸ்வேதாவை மறக்க முடியவில்லை அதாவது முடியாது என்பதும் உண்மை. இதையெல்லாம் சொல்லி உன் தோழியிடம் சொல். சம்மதித்தால் ரிஜிஸ்டர் பண்ண நீயே தேதி சொல்லு என்று சொல்லி விட்டு சென்றான்.

அப்பாடா என்று பெருமூச்சு விட்டபடி அமர்ந்தாள் ஸ்வீனா.

ஸ்வீட் ஹார்ட்... இதெல்லாம் சரியா வருமா என்றான். எல்லாம் சரியா வரும். இந்த ஜனனியை எப்படி ஓகே சொல்ல வைப்பது என்றவள் அதற்கு இந்த திட்டம் சரியா வருமா அஸ்விட் என்று தன் எண்ணத்தை சொல்ல தொடங்கானாள்.

ஸ்வீனாவின் இந்த திட்டம் பலிக்குமா... ஜனனி  ஜனாவை திருமணம் செய்து கொள்வாளா.. இந்த திருமணம் நடந்தால் நிலைக்குமா... பார்க்கலாம்..

தொடரும்

Next episode will be published as soon as the writer shares her episode.

Go to Ullam kollai poguthe story main page

12 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.