துக்கமும் சேர்ந்து வருத்தப்பட்டது இருக்காங்க" நந்து சொல்ல, "பரவால்லை நந்தா. என்கிட்டே பேசறதுனால உங்களுக்கு கொஞ்சம் ரிலாக்சிடா இருக்கும்னா தாராளமா சொல்லுங்க" ராம் சொல்லவும் "தேங்க்ஸ் மாமா" என்றான் நந்தா.
"நந்தா, நான் ஒரு விஷயம் கேட்டா தப்ப நெனைக்க மாட்டிங்களே?" ராம் தயக்கத்துடன் கேட்க, "இல்லை மாமா என்ன கேக்கணுமோ தாராளமா கேளுங்க" நந்தா ஊக்குவித்தாலும் சற்றே தயக்கத்துடனே கேட்டான் ராம்.
"தமிழ்மாறனுக்கு என்னாச்சு? தமிழ்செல்வி ஏன் அபிராமி அத்தை கூட இருக்கா?" ராம் கேட்கவும் நந்தா அவனை அதிர்ச்சி+ஆச்சர்யத்துடன் பார்த்தான்.
அவனின் பார்வையின் பொருள் புரிந்தவன் ஒரு பெருமூச்சுடன் தன்னிலை விளக்கம் அளிக்க முயன்றான்.
"எனக்கும் இதை யார்கிட்டதா கேட்கறதுனு தெரியல. எனக்கும் தமிழுக்கும் நடந்த கல்யாணம் ஒரு வகைல ஒரு குழப்பத்தால் நடந்தது. அதனால எனக்கு தமிழையும் அவளுடைய கடந்த காலத்தையும் புரிஞ்சுக்கிற வாய்ப்பு கிடைக்கல. வாய்ப்பு கிடைக்கலைனு சொல்றதை விட வாய்ப்பை நான் பயன்படுத்திக்கலனு சொல்லலாம். இங்க வந்ததுக்கு அப்பறம் எனக்கு நிறைய விஷயங்கள் தெரிஞ்சுது. இதுக்கு மேலையும் நான் தெரிஞ்சுக்க முயற்சி பண்ணாம இருந்தா கண்டிப்பா நான் என் லைப்ல வருத்தப்பட கூடிய சூழ்நிலை உருவாகும்னு தோணுது. அதனால தான் உங்ககிட்ட கேக்கறேன். இப் யு டோன்ட் மைண்ட் தமிழ்செல்வியும் தமிழ்மாறனும் அவங்க பிரென்ட் உடைய மேரேஜ்க்கு ஹெல்ப் பண்ண போனதுக்கு அப்பறம் என்னாச்சு?"
ராம் சொல்வதை கேட்ட நந்தா, "மாமா உங்களுக்கும் தமிழுக்கும் இடைல என்ன சூழ்நிலைனு எனக்கு தெரியல. ஆனா உங்க ரெண்டு பேருக்குள்ள ஏதாவது மிஸ்அண்டர்ஸ்டேண்டிங் இருந்தா அதை என்னால சரி பண்ண முடிஞ்சா தமிழ் லைப்ல ஏதோ ஒரு வகைல உதவினோம் அப்படிங்கற ஒரு சின்ன சேட்டிஸ்பெக்ஷன் கிடைக்கும்" என்ற நந்தா அன்று என்ன நடந்தது என்பதை சொல்ல தொடங்கினான்.
"இந்த மாதிரி ரெஜிஸ்டர் மேரேஜ் எல்லாம் நான் சினிமால தான் பார்த்திருக்கேன். எனக்கு பயமா இருக்கு மாறா...ஒன்னும் பிரச்சனை வராதுல?" தமிழ்செல்வி மாறனிடம் கேட்க, "அதெல்லாம் ஒன்னும் வராது. ஜஸ்ட் ரெண்டு பெரும் ரெஜிஸ்டர் ஆபீஸ் போறோம் கையெழுத்து போடறோம் அவ்ளோ தான். ரொம்ப நேரம் எல்லாம் எடுக்காது. சீக்கிரமே மேரேஜ் ரெஜிஸ்டரேஷன் முடிஞ்சிடும். நீ நாளைக்கு காலேஜ் பஸ்ல வந்துடு. காலேஜ் முன்னாடி இறங்காம ரெஜிஸ்டர் ஆபீஸ் முன்னாடி இறங்கிடு. நான் சீக்கிரமே கிளம்பிடுவேன் வீட்ல இருந்து. மாலை எல்லாம் வாங்கணும். பயப்படாம இரு" மாறன் சொல்லவும் "ஹ்ம்ம் சரி அப்போ நாளைக்கு பாக்கலாம். குட் நைட்" என்று மாறனிடம் விடைபெற்று எழுந்து