தூங்கிடாத. ஆம்புலன்ஸ் வந்துரும்....ப்ளீஸ் மாறா" அவள் அழுகையினூடே பேச, அதற்குள் அவர்களின் கல்லூரி நண்பர்கள் சிலர் வந்து சேர்ந்தனர்.
என்ன நடந்தது என யாருக்கும் விளங்கவில்லை. ஒவ்வொருவரும் ஆம்புலன்சுக்கு அழைத்து கொண்டிருக்க அவளின் கையை இருக்க பற்றினான் தமிழ்மாறன்.
"தமிழ், என் அம்மா தங்கச்சிகளை நீ தான் பார்த்துக்கணும்.ப்ளீஸ் தமிழ்....ப்ரோமிஸ் பண்ணு" மாறன் சொல்ல, "இல்லை நான் பண்ண மாட்டேன். உனக்கு ஒன்னும் இல்லை. நீ இப்படி எல்லாம் பேசாத மாறா.,. எனக்கு பயமா இருக்கு" என்று அழுதவளின் கண்ணீரை துடைத்தவன் அவளை நோக்கி கையை நீட்ட அழுகையுடன் நீட்டிய அவன் கையை பற்றினாள் தமிழ்செல்வி.
அவளை பார்த்து மேலால் புன்னகைத்தவன் கண்கள் மூட "மாறா...." என்ற அலறலுடன் மயங்கி சரிந்தாள் தமிழ்செல்வி.
ஏதோ வலி இருதயத்தை பிழிவதை போல இருந்தது. கண்ணை திறந்து பார்த்தால் பார்க்கும் இடம் எல்லாம் ரத்தம். இங்கிருந்து போ என மனம் அவளை துரத்தியது. ஆனால் எழுந்திரிக்க முடியவில்லை. "குட்டிமா குட்டிமா" அவள் அப்பா அவளை அழைக்கும் குரல். ஆனால் ஏன் என்னால் அப்பாவை பார்க்க முடியவில்லை??? "கண்ணை திற தமிழ்" தனக்கு தானே சொல்லி கொண்டாள்.
"இல்லை திறக்காதே...கண்ணை திறந்தால் ஒரே ரத்தம்....யாருடைய ரத்தம் இது...இது..இது....மாறா மாறா" அவள் அலறி கொண்டிருக்க,
"அம்மாடி அழாதம்மா கண்ணை திற இங்க பாருடா அப்பா இருக்கேன்...கண்ணை திறம்மா" ராமநாதன் தமிழ்செல்வியின் கையை பிடித்த படி அவளை எழுப்ப முயன்று கொண்டிருந்தார்.
அருகே இருந்த மருத்துவர் அவளுக்கு ஒரு ஊசியை போடவும் அவளின் பதற்றம் குறைந்து உறங்க தொடங்கினாள்.
"இன்னும் எவ்ளோ நாள் டாக்டர்? என் பொண்ணு இப்படியே இருப்பா? ஒரு வாரமா கண்ணை திறக்கவே இல்லை..."ராமநாதன் டாக்டரிடம் கேட்க, "சார் நான் ஏற்கனவே சொன்ன மாதிரி உங்க பொண்ணுக்கு உடம்புல எந்த பிரச்சனையும் இல்லை. அவ மனசு தான் பாதிக்க பட்டு இருக்கு. அவளுடைய கிளோஸ் பிரென்ட் அவ கண்முன்னால் அவ மடியில இறந்தது அவளை ரொம்ப பாதிச்சிருக்கு. சீக்கிரம் சரியாயிடும். நீங்க தைரியமா இருங்க" மருத்துவர் நகர, அங்கிருந்த இருக்கையில் ஓய்ந்து போய் அமர்ந்தார் ராமநாதன்.
அவருக்கு என்ன செய்வது என புரியவில்லை. தமிழ்மாறனை கையை காலை உடைத்து தூக்கி வர சொன்னாரே தவிர கொல்ல சொல்லவில்லை. ஆனால் அப்படி ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டது. தன்னுடைய கோபத்தால் நடந்ததை எண்ணி வருந்துவதா இல்லை