(Reading time: 20 - 40 minutes)
Priyamaanavale
Priyamaanavale

"அ...அது...குட்டிமா...ரௌடி பசங்க..."ராமநாதன் தடுமாற, "அப்பா உங்களுக்கு ஒரு சான்ஸ் தறேன்பா. நான் கேட்டது தப்பா இருக்கலாம். உங்க வாயில இருந்து முழுசா என்ன நடந்துச்சுனு தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பு தரேன் பா" அவளின் இறுகிய முகம் எல்லோருக்கும் பயத்தை உண்டாக்கியது.

"இ...இல்லை குட்டிமா. நீயும் மாறனும் ரெஜிஸ்டர் ஆபீஸ்ல கல்யாணம் பண்ணிக்க போறதா பேசிக்கிட்டதை போன்ல ரெக்கார்ட் பண்ணி இதோ இந்த நந்துவும் விக்கியும் காட்டுனாங்கமா. அதை நம்பி நான் மாறனை மிரட்டி தூக்கிட்டு வரச்சொல்லி ஆள் அனுப்புனேன். ஆனா சத்தியமா அவனை கொலை பண்ண சொல்லல.என்னை நம்புடா தமிழ். இப்போ தான் தெரிஞ்சுது நீங்க ரெண்டு பேரும் போனது உங்க பிரெண்டோட கல்யாணத்துக்குனு... தெரிஞ்சோ தெரியாமலோ நான் பண்ணுன ஒரு தப்புனால இப்போ அவன் குடும்பம் தவிச்சிட்டு இருக்கு. அதான் குட்டிமா அதான் அவங்க குடும்பத்துக்கு இருபத்தியஞ்சு லட்சம் கொடுக்க சொல்லி இப்போ தாண்டா சொன்னேன்" ராமநாதன் தமிழ்செல்வியை கைகளை பற்றியபடி சொல்லிவிட்டு அவள் முகத்தை பார்த்தார்.

அவரின் கைகளை தன்னுடைய கையில் இருந்து விலக்கியவள் "நந்துவும் விக்கியும் சொன்னதை நம்பி ரவுடியை அனுப்புனீங்க. இல்லையாப்பா?" தமிழ்செல்வி கேட்க, "ஆமாம்மா ஆமாம்" ராமநாதன் சொல்ல, "அப்போ உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லாம போய்டுச்சு இல்லையாப்பா? என்கிட்டே ஒரு வார்த்தை கேட்கணும்னு தோணலை இல்லையா?" தமிழ்செல்வியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் கையை பிசைந்தார்.

"சரி அதை விடுங்க, உங்ககிட்ட வேலை பார்த்தவருடைய பையன். அவன் தெரிஞ்சோ தெரியாமலோ உங்க தவறால் இறந்துட்டான். நீங்க கிரேட் பா. உடனே அந்த தவறை உணர்ந்து அந்த சாதாரண குடும்ப பையனுக்கு நஷ்டஈடா இருபத்தி ஐந்து லட்சம்...ஒன்னு ரெண்டு இல்லை இருபத்தி ஐந்து லட்சம் கொடுக்கறீங்க...நீங்க கிரேட் பா..." தமிழ்செல்வியின் வார்த்தைகளில் தெறித்த கிண்டலும் அவளின் உதட்டில் இருந்த அந்த புன்னகையும் அவள் கண்களில் தெரிந்த வெறுப்பும் ராமநாதனுக்கு எதுவோ சொல்ல, அருகே இருந்த இருக்கையை இறுக பற்றிக்கொண்டார்.

"எப்படிப்பா கேஷா இல்லை செக்கா கொடுக்கறீங்களா?" தமிழ்செல்வி கேட்க "கேஷ்..கேஷாவே கொடுக்க சொல்றேன்மா..." என்றவர் வேகவேகமாக அங்கிருந்த பீரோவில் இருந்து பணத்தை எடுத்து அந்த டேபிளின் மேல் வைத்தார்.

அந்த டேபிளின் அருகே வந்தவள், அந்த பணத்தை ஒரு நிமிடம் பார்த்தாள்.

"ஒரு நிமிஷம் பா" என்றவள் வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறினாள். அங்கிருந்த

21 comments

  • :sad: epi aduthavar pechin moolam vishayam therinthu kobapattu mudivu edukka koodathu enbathu ippadhivin moolam therigirathu.but tamil appa mela thappu illai enbathu tamilukku theriyuma :Q: eagerly waiting 4 next epi (y) :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.