அந்த பைலை ஓரங்கட்டியவள் அதனோடு இருந்த மற்றொரு பைலை புரட்டி பார்த்தாள்.
அந்த பைலில் இருந்த பேப்பரில் எதுவும் எழுதப்படவில்லை. ஆனால் ஒரு சிறு ஓவியம் மட்டும் வரையப்பட்டிருந்தது. அதையே கூர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தாள் குயிலி.
அவளுக்கு எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெரிந்தது. இதிலிருந்து தான் எதையோ புரிந்துகொண்டு அதன் மூலம் தான் வழியை அறிந்து கொள்ள வேண்டும் என்று.
அந்த பேப்பரை அவள் வெகு நேரமாக பார்த்து கொண்டிருப்பதை பார்த்த ஆசீர்வாதம் தாத்தா அவள் அருகில் வந்து அமர்ந்தார்.
அம்மாடி குயிலி ரொம்ப நேரம் ஆயிற்று. நாம இன்னும் இப்படி ஒளிந்து ஓட வேண்டியது எவ்வளவு தூரம் இருக்கிறது என்று தெரியவில்லை. அதனால் இப்பொழுது ஓய்வெடு. காலையிலேயே மீண்டும் மற்றவற்றை பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்ல எல்லாவற்றையும் அங்கிருந்த இடத்தில் பத்திரப்படுத்தி வைத்து விட்டு படுத்துக்கொண்டாள்.
பொழுது விடிந்தது...
கண் விழித்த ஆசிர்வாதம் தாத்தா ஆச்சரியப்பட்டு போனார். குடிக்க நீரும் அருகில் சில பழ வகைகளும் இருந்தது. அதைப் பார்த்ததும் தாத்தாவிற்கு சற்று ஆச்சரியமாக இருந்தது.
இவ்வளவு காலையிலேயே நீ எங்கு சென்றாய் இதை வாங்க, கவனமாக இருக்கவேண்டும் குயிலி என்றார்.
இந்தக் காடுகள் எனக்கு பழக்கப்பட்டவைகள் தான். நீங்கள் இந்த பழங்களை சாப்பிட்டு தண்ணீர் அருந்துங்கள். அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கிறேன் என்றவள் பேப்பரை எடுத்துப் பார்த்தாள். ஆனால் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. சாப்பிட்டு முடித்த தாத்தா குயிலி பக்கத்தில் வந்து அமர்ந்தார் .
அம்மாடி குயிலி... இது என்னம்மா சின்ன பிள்ளைங்க வரைந்து பழகுகிற மாதிரி இருக்கு என்று ஒன்றும் புரியாமல் கேட்டார்.
தாத்தா இதுதான் அடுத்து நான் எங்கே செல்லவேண்டும் என்று சொல்லும் ஒரு குறிப்பாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
அப்படியா... ஆனால் இதில் எதுவும் எழுதப்படவில்லை என்றவர் அந்த படத்தை மீண்டும் பார்த்துவிட்டு ஒரு தேன் ஈச்சீ இருக்கு.. அப்புறம் ஒரு குளம் இருக்கு... அப்புறம் டீ கடை இருக்கு... அப்புறம் கள்ளிச்செடி இருக்கு... அப்புறம் நாய் இருக்கு... ஒரு பெரிய மலையும் அந்த மலையிலே ஒரு புத்தர் சிலையும் இருக்கு...
என்னமா படம் இது... இதை வச்சு நாம என்ன செய்யுறது... கீழே ஏதோ எழுதி இருப்பதைப்