பார்த்து அம்மாடி குயிலி இதுல எதுவோ எழுதி இருக்குல்ல, அத வச்சு நாம போயிடலாம் அந்த இடத்துக்கு என்றார் வெகுளியாக.
தாத்தா... இதில் என்ன எழுதி இருக்கு தெரியுமா.. "துணையை நீக்கிவிடு" என்று எழுதி இருக்கு. அப்போ நான் உங்கள விட்டுட்டு தனியா தான் போக போறேன் அந்த இடத்திற்கு என்று சொல்ல அவரோ இல்லம்மா இல்லை... இப்பொழுது உன்னை ஆபத்து சூழ்ந்து நிற்கிறது. நான் உன்னை தனியாக விட மாட்டேன். நீ எங்க போனாலும் நான் உன்னுடனே வருவேன் என்று சொல்ல அவளோ முடியாது தாத்தா என்னை சுற்றி ஆபத்து அதிகம் இருக்கிறது. இந்த நிலையில் நான் உங்களையும் அழைத்துக்கொண்டு சென்று உங்களையும் ஆபத்தில் தள்ளி விட மாட்டேன் என்றாள் உறுதியாக.
சிறிது நேரம் யோசித்த ஆசிர்வாதம் தாத்தா அம்மாடி குயிலி... நீ என்னை தனியாக விட்டு விட்டு சென்ற பிறகு உன்னை தேடி வந்தவர்கள் என்னை கண்டுபிடித்தால் நீ எங்கு செல்கிறாய் என்று என்னிடம் கேட்பார்கள். நான் சொல்லவில்லை என்றால் என்னை கொன்று போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆனால் நான் உன்னுடன் வந்தால் நாம் இருவரும் பாதுகாப்பாக இருப்போம் என்று நம்புகிறேன்... நீ என்ன சொல்கிறாய் என்று கேட்க அவளால் மறுப்பு எதுவும் சொல்ல முடியாமல் சரி என்று தலை அசைத்தாள்.
சொல்மா... இப்பொழுது சொல். நாம் எங்கே செல்லவேண்டும் என்று அவர் கேட்க அவளோ இந்த படம் தான் நமக்கு வழிகாட்ட வேண்டும். இது எதையோ ஒன்றை உணர்த்துகிறது. அது என்னவென்று கண்டுபிடித்தால் தான் நாம் அடுத்த நிலைக்கு செல்ல முடியும் என்று அந்த படத்தையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தாள் குயிலி...
அதே நேரத்தில் சென்னையில்..
பத்து நாள் ஆகும் என்று சொன்ன வேலையை இரண்டே தினங்களில் முடித்து விட்டு தோட்டத்தில் ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டு யோசனையில் லயித்திருந்தான் ராகவ்.
ராகவ் உன் வேலையெல்லாம் முடிந்ததா என்றபடியே அங்கு வந்த புஷ்பா ராகவ்வின் யோசனையை கண்டு என்ன எதையோ யோசித்து கொண்டு இருக்கிறாய் போல என்றாள்.
ஒன்றும் இல்லை அம்மா. என்னுடைய ப்ராஜெக்ட் முடிந்துவிட்டது. அதனால் ஒரு பத்து நாள் அமெரிக்கா போய்விட்டு வரலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்ல அங்கு வந்தார் அவனுடைய அப்பாவும் புஷ்பாவின் கணவருமான பிரதாபன்.
ஹாய் டாட்... வோட் அ சர்பிரைஸ்.. நீங்க எப்போ வந்தீங்க என்றபடியே அவரை அணைத்துக் கொண்டான் ராகவ்.
இப்பதான் வந்தேன். நீ ஏதோ அமெரிக்கா போகிறது பற்றி பேசிக் கொண்டிருந்தாயே... ஏன் என்ன விஷயம்.