"அது அப்படித்தான் நந்து. அவனை எல்லோரும் கொண்டாடுனதால தன்னோட எண்ணங்கள் செயல்கள் சரியானவைனு நினைச்சான். அதுவும் சரிதான்… ஆனால் அடுத்தவங்களுடைய தேவையை புரிஞ்சுகிட்ட மாதிரி அவங்களுடைய மனதை புரிஞ்சுக்க முயற்சி பண்ணவில்லை. மீராவை அவன் நேசிச்ச அளவிற்கு அவளுடைய நம்பிக்கையை பெறவில்லை"
"அதை நெகடிவா சொல்ல கூடாது. அண்ணிதான் அண்ணன் மனதை நோகடிக்க கூடாதுனு எல்லாத்தையும் மறைச்சிட்டாங்க."
"அதனால மீரா உயிரோட இருக்காளா இறந்துட்டளானு தெரியலை. ஓகே… நான் என்ன நினைச்சேன்னா அவனோட காதலின் தாக்கத்தால் மீராவோட நினைவிலேயே வாழ்ந்துடுவான்னு நினைச்சேன். ஆனால் ரேச்சல் கனவுல வர்ற அளவிற்கு டிஸ்டர்ப் ஆவான்னு நினைக்கலை."
"ஆஹாங்… அதுக்காக அப்படியே எங்கண்ணன் இருக்க முடியுமா… ஜஸ்ட் முப்பது வயசுதான்ப்பா. புதுசா வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியதுதான். ரேச்சல் கிட்ட ஏதோ ஸ்பெஷல் இருக்குனு நினைக்கறேன்.. அண்ணன் அட்ராக்ட் ஆவாரு"
"முடியுமா என்ன?. "
"இப்பவே அப்படித்தான்... "
"அப்புறம் எதுக்கு சண்டை பிடிக்கறானாம்"
"அது உள்ளுக்குள்ளேயே நடக்கற சண்டைப்பா… இரண்டாவது மூளையான இதயம் ரேச்சல் வேணும்னு சொல்லுது… முதல் மூளை கணக்கு போட்டு வேண்டாமனு சொல்லுது."
"எம்எஸ்டபிள்யூ படிச்சிட்டு சைக்காலஜி பேசுற…"
"அதுவும் சிலபஸ்ல இருக்குப்பா. நம்ம மூளை ஒரு ரெக்கார்ட் ரூம் மட்டுமல்ல… சில நடைமுறைகளும் வச்சிருக்கும். ஒரு விஷயத்தை நமக்கு நினைவுபடுத்துவதும் அதுதான்… அதை பாஸிட்டிவாகவோ நெகடிவாகவோ மாற்றும் கூடுதல் விவரங்களை தருவதும் அதுதான். மீராவை பற்றி நினைக்கும்போது டோபோமைனை சுரந்து அந்த காதலின் இனிமையை பூந்தூறலாக தூவும். அதே மூளைதான் ரேச்சலைபற்றி நினைக்கும்போது வெறுக்க வைக்கும் ரியாக்ஸன்ஸை செய்கிறது. ஏனெனில் அது பழைய ப்ராமிஸை நினைவிலா வைத்திருக்கும்.."
"என்ன ப்ராமிஸ்… இந்த இப்பிறவிக்கு மீராவை தவிர வேறு யாரையும் சிந்தையாலும் நினையேன் என்றா…"
"கம்பராமயணமா… இருக்கலாம்.இந்த ராமர் ரோல் எதிக்ஸ் கொஞ்சம் டென்சன் கிரியேட் பண்ணும்… அதனால்தான் அண்ணன் ஓவரா ரியாக்ட் பண்ணிடறார்."