"அதோட விடாமல்… மன்னிப்பு கேட்க வேணும்னு அனத்தறான்.."
"அது ஜென்டில் மேன் இமேஜ்பா… ரேச்சல் தப்பா வரையறை செய்துவிடக் கூடாது அல்லவா?"
"ரொம்ப முக்கியம்… தப்பா நினைச்சால்தான் என்ன" அவன் அலுத்துக் கொண்டான்.
"அதை அந்த இதயம் ஒப்புக் கொள்ளாதே… அது ஒரு எமோஷனல் டைப்… அதுக்கு ரேச்சலை பிடிச்சிருக்கு. மீரா இருந்திருந்தால் ரேச்சலை மை பெஸ்ட்டினு தைரியமாக சொல்லி இருக்கும். மீரா இல்லாததால் உறவு முறை கண்க்கிட்டு குழம்புகிறது."
"ம்… இது எப்போதுதான் முடியும்?"
"மூளை இதயம் இரண்டும் ஒருமித்த முடிவிற்கு வர வேண்டும்… இப்போதுதானே பேச்சு வார்த்தை ஆரம்பித்து இருக்கிறது. அதனாலதான் கனவு வந்திருக்கிறது."
"எனக்குகூட கனவு வந்திருக்கிறது நந்து…"
"என்னது?"
"கல்யாணத்திற்கு முன்னாடி…"
"கனவுல நான்தான் வந்தேனா?"
"ஆமாம்னு சொல்ல நினைக்கிறேன். பட்… டு பீ ஃப்ராங்க்… இல்லை. ஏன்னா அப்போ நான் உன்னை மீட் பண்ணவே இல்லை…"
"ஓ… என்னை பார்க்கறதுக்கு முன்னாடி போற வர்ற பொண்ணுங்களை பத்தி கனவு கண்டயாக்கும்…"
"போற வர்றதை பத்தி இல்லை. கொஞ்சம் பிடிச்ச கேரக்டரா இருந்தால்…"
"இப்ப எதுக்குடா இந்த ஃப்ளாஷ் பேக்..?"
"கனவுங்கறது நடக்கப் போற விஷயத்திற்கு கட்டியம் சொல்லும் என்றாயே… ரேச்சலும் சத்யனும் சேர்ந்திடுவாங்கனு சொல்ற. அப்படி பார்த்தால் நான் பார்த்த கனவெல்லாம் அது பாட்டுக்கு வரும்… அது பாட்டுக்கு கலைஞ்சிடும்."
"இப்ப அண்ணாவுக்கு நெகடிவா நடக்காது… உனக்குதான் நடக்க போகுது.."
"சும்மா ஒரு ஆர்க்யூமென்டுக்காக சொன்னேன் நந்து. யார் கனவு கண்டால் நமக்கு என்ன பிரச்சினை?"
"ஆஹாங்.. அப்படியே இருக்கட்டும். நீங்க ரேச்சலை சமாதானம் பண்ண ஹெல்ப் பண்ணுங்க. நானும் மனுவை வச்சு முயற்சிக்கறேன்… நல்லது நடக்கும்னு நினைப்போம்பா… ரேச்சல் அம்னீசியாவிலிருந்து குணமானாலும் மனுவிடம் லவ்விங்கா இருப்பாள். ஏன்னா ஒரு குழந்தையை நேசிக்க காரணம் எதுவும் வேண்டாம்."
"சரிம்மா.. நான் ட்ரை பண்றேன்." ரஞ்சன் கிளம்பினான். அவனால் அதை முடிக்க முடியாமல்