நான்தான் திருத்தனுமாம்."
"இந்த கதையெல்லாம் நடக்காது கல்பி. அப்படி நடக்கும்னு நினைச்சு கல்யாணம் செய்துட்டு எத்தனை பெண்கள் கஷ்டபடறாங்க தெரியுமா. அவனை ஏதாவது சிகிச்சை எடுத்து குடிக்கறதை விட்டுட்டு வர சொல்லு. அப்புறமா கல்யாணம் செஞ்சுக்கோ"
"அதுக்குள்ள இன்னொரு பிரச்சினை… அந்த டூரிஸ்ட் ஸ்பாட்டுல கார்மேகம்னு ஒருத்தன் கடை வச்சிருக்கான். அவன் என்னை கல்யாணம் பண்ணிக்குவேன்னு மிரட்டுறான்."
"நீ உன் விருப்பத்தை சொல்லிட்டியா?"
"நான் என் மாமனைதான் கட்டிக்குவேன்னு சொல்லிட்டேன். ஆனால் அவன் என்னை கட்டாயபடுத்தி ஏதாவது தப்பா செஞ்சு ஊர் பஞ்சாயத்துல மன்னிப்பு கேட்டு கல்யாணம் பண்ணிப்பானாம்.."
"சீ… அவனை செருப்பால அடிச்சிருக்கணும். நீ மாரப்பன்ட்ட சொன்னியா?"
"அது அவனை கொன்னு போட்டுடும். அதனால சொல்லலை. கார்மேகம் மட்டும் தப்பான நோக்கத்துடன் என் பக்கத்துல வந்தால் கொலையே செய்வேன். ஆனால் அந்த மாதிரி சூழ்நிலையில பயம் வந்து எதிர்க்க முடியாம போய்.... அதையும் தாண்டி ஏதாவது நடந்துடுச்சுன்னா… வியாபாரத்துக்கு போகாமல் இருக்கலாம்னு பார்த்தால் அம்மா வச்சிட்டு போன கடனை கட்டனும்பா. இல்ல குடிகாரனா இருந்தாலும் பரவாயில்லைனு மாமனையே கலயாணம் செய்துக்கவா… என்ன செய்றதுனு தெரியலை."
"நீ பயப்படாதே… மனதை உறுதியாக வைத்துக் கொண்டால் நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது. ஒரு பெண்ணுடைய விருப்பம் இல்லாமல் அவளை அடைய முடியாது. நிர்பயானு ஒரு பொண்ணு நாலு தடியன்கள்ட்ட மாட்டினாள். கடைசிவரை போராடி இறந்து போனாள். அவளை அந்த கொடூரன்களால் அடைய முடியவில்லை.. அவள் உடலை சிதைக்கதான் முடிந்தது. அவள் அந்த மோசமான சூழ்நிலையிலயும் தைரியத்தை கை விடலை. என்னை தொடாதேன்னு கெஞ்சறதை விட என்னை தொடக்கூடாதுன்னு சொல்றதுதான் வீரம். உங்கிட்ட அந்த வீரம் இருக்குனு வச்சிக்கோ… கைக்கு கிடைச்சதை வச்சு மண்டைல போடு. அவன் செத்தாலும் பரவாயில்லை. தற்காப்புக்காக நடந்துச்சுனு கோர்ட்டே மன்னிச்சுடும்."
"என் வாழ்க்கை என்னவாகப் போகுதுன்னு தெரியலை ரேச்சல்… நான் தைரியமாக இருக்க பார்க்கறேன்."
"இன்னும் ஸ்ட்ராங்கா இரு. வெறும் வாய் பேச்சு பேசாமல் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக பலமாக வச்சுக்கோ. உன்னுடைய பாதுகாப்பை உறுதி படுத்திக்கோ. யாரும் நம்மை காப்பாற்ற மாட்டார்கள். நம்மை நாம்தான் பத்திரமாக பார்த்துக்கணும். அக்கா பொண்ணு கஷ்டபடுறாள் உதவுவோம்னு நினைக்காமல் குடிச்சிட்டு திரியற மாரப்பனையும