கடைசி நேரத்துல கான்செல் பண்ணிட்ட அப்படின்னு உனக்கு ஒரு கருப்பு புள்ளி விழும்.... இது தேவையா..”, பயிற்சியாளர் விவரிக்க, அனைவரும் இதென்ன அடுத்த சோதனை என்று பார்த்தனர்....
மைத்திக்கும் என்ன முடிவெடுக்க என்று தெரியவில்லை... தன் தந்தை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும்போது தன்னால் சென்று விளையாட முடியுமா என்ற மிகப்பெரிய அச்சம் அவளை சூழ்ந்தது.... அதுவும் இரண்டு நாட்களாக தந்தை கண்ணை கூட திறக்காமல் மயக்கத்திலேயே அசைவில்லாமல் இருக்கிறார்.... தான் லண்டன் சென்று திரும்ப எப்படியும் ஒரு மாதம் ஆகும்.... இந்த நிலையில் தான் திரும்ப வரும்போது அவரின் நிலை என்னவாக இருக்கும் ..... தனக்காக, தன் ஆசைக்காக என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்த மனிதன் அசைவின்றி படுத்திருக்கும்போது தன்னால் முழு ஈடுப்பாட்டுடன் விளையாட முடியுமா என்ற பயம் வந்தது.... தன் மனதின் பயங்களை அவள் கூற ஆரம்பித்தாள் ...
இத்தனை நாட்கள் விளையாட்டு பெண்ணாக சுற்றியவள் மனதளவில் எத்தனை பொறுப்புள்ளவளாக இருக்கிறாள் என்று அனைவரும் அவளை பார்த்தனர்...
தன் மகனை எண்ணி கவலையுடனும், கண்ணீருடனும் இருந்த காமாட்சி பாட்டி மைத்தியை தன் அருகில் அழைத்து தலையை வருடினார்...
“ஏண்டி கோந்தே... நேத்து சாயங்காலம் வரை இந்த போட்டிக்கு போகணும்ன்னு எத்தனை ஆசையா இருந்தேன்னு எங்க எல்லாருக்கும் தெரியும்... இப்போ நீ போகலைன்னு சொல்றதையும் எத்தனை மனக்கஷ்டத்தோட சொல்றேன்னு புரியறது... ஆனா அதுக்கு அவசியமே இல்லைடி கோந்தே....”
“என்ன பாட்டி சொல்ற... அப்பா இப்படி இருக்கறச்ச நான் எப்படி ஊரை விட்டு கிளம்பறது... அவர் எப்படி இருக்கார்ன்னு கூட உடனே வந்து பார்க்க முடியாதபடி இருப்பேன்....”
“நாங்க இத்தனை பேர் சுத்தி இருக்கோம்... நீ கவலைப்படாம போயிட்டு வா மைத்தி... உங்கப்பா நீ போட்டி முடிஞ்சு வரும்போது உன்னோட பேசற அளவுக்கு எழுந்து உட்கார்ந்து இருப்பான்.... அவனுக்கு இப்படி ஆனதால இந்தியா சார்பா விளையாடற முதல் போட்டிக்கே போக முடியலைன்னு தெரிஞ்சா அவனுக்கு எத்தனை வருத்தமா இருக்கும்... யோசிச்சு பாரு... நீ மேல மேல நன்னா விளையாடி இந்திய குழுக்கு தேர்வாகணும்ன்னு அத்தனை ஆர்வமா எல்லாம் பண்ணினான்... அவன் முழிச்சு பார்க்கும்போது நீ போகலைன்னு தெரிஞ்சா அவனுக்கு அதுவே பெரிய அதிர்ச்சியா இருக்கும்.... அதனால எதையும் யோசிக்காம நாளைக்கு கிளம்பு.....”, காமாட்சி பாட்டி சொல்ல மற்றவர்களும் அதையே வலியுறித்தினர்...
“சரி பாட்டி.... நீங்க எல்லாம் சொல்றதால கிளம்பறேன் ..... ஆனால் என்னோட மொத்த நினைப்பும் அப்பாவை பத்திதான் இருக்கும்.... எப்படி விளையாடப் போறேன்னுதான்