(Reading time: 8 - 15 minutes)
Thoora theriyum megam
Thoora theriyum megam

அவள் படிகளில் குதித்திறங்குவதையும், ஓட்டமாய் தெருவுக்குச் சென்றதையும், தன் வீட்டு வாசலிலிருந்து கவனித்த வீட்டு ஓனர் சம்பூர்ணம், முகத்தில் எரிச்சலுடன் தலையை மேலும், கீழும் ஆட்டினாள். அவள் வாய் சத்தமில்லாமல் அர்ச்சனாவைத் திட்டித் தீர்த்தது.

சம்பூர்ணம் தன்னைக் கவனிப்பதையும், தன்னுடைய செய்கைகளில் கோபப்பட்டு தலையை ஆட்டுவதையும், அதன் காரணமாய் அவள் வாய் முணுமுணுப்பதையும் அர்ச்சனா கவனிக்காமலில்லை. நன்றாகவே பார்த்து விட்டாள். ஆனால், கவனிக்காதது போல், மேலும் அலட்டல் காட்டிக் கொண்டு சென்றாள். அதுதான் அவள் ஸ்டைல்.

“இந்தக் குமரிக்கு எத்தனை ஒரு திமிரு இருந்தா இப்படி அடக்க, ஒடுக்கம் இல்லாம குதிச்சிட்டுப் போவா?...ஹூம்...இவளெல்லாம் நாளைக்கு எவன் கிட்ட சிக்கிக் சீரழியப் போறாளோ?...அது செரி...இவ எங்க சீரழியப் போறா...இவளைக் கட்டிக்கிட்டா அவந்தான் சீரழியுவான்!” போகும் அர்ச்சனாவையே வெறித்துப் பார்த்து, மனசுக்குள் கறுவினாள் சம்பூர்ணம்.

“இந்தக் கிழட்டுச் சனியனுக்கு எப்பவும் என்னை நோட்டம் போடுறதே வேலை!...எப்படா ஏதாவது சான்ஸ் கிடைக்கும்...அதை வெச்சு இவ கூட சண்டை போடலாம்ன்னு காத்துக் கிடக்குது!...மூதேவி!...இவ வீட்டுல வந்து குடியுருக்கணும்னு எங்க தலையெழுத்து!...கர்மம்...கர்மம்!” என்று அர்ச்சனா அந்த சம்பூர்ணம்மாவை அர்ச்சனை செய்து கொண்டே பேருந்து நிறுத்தத்தை நோக்கித் தன் கால்களைச் செலுத்தினாள்.

தொடரும்...

Next episode will be published soon.

Go to Thoora theriyum megam story main page

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.