(Reading time: 11 - 22 minutes)
Priyamaanavale
Priyamaanavale

நின்றிருந்த தமிழை பார்த்த விசாலம், "பாருடா...என் பேரனுக்கு கூட வெட்கம் வருமா என்ன? அதென்ன பொண்டாட்டிக்கு மட்டும் ஸ்பெஷலா வாங்கிட்டு வந்துருக்கான்" எனவும் "சே சே அபப்டி எல்லாம் இல்லை பாட்டி" என்று சொன்னாலும் தமிழின் மனம் சற்றே குளிர தான் செய்தது.

"அவங்க அப்பா இறந்த சோகத்துல இருப்பாளேனு ஏதாவது வாங்கிட்டு வந்துருப்பாரு. அதை பெருசு பண்ணாதீங்க" என்றபடி நித்யா கையில் இருந்த புத்தகத்தை தூக்கி கொண்டு அங்கிருந்து நகர, தமிழின் முகம் வாடி போனது.

அதை கண்ட விசாலம், "அவ கிடக்கறா மட சாம்பிராணி...வா என்ன தான் வாங்கிட்டு வந்துருக்கானு பாக்கலாம்" என அவளை தன்னிடம் அழைத்து அமர வைத்தார்.

விதவிதமாக சுடிதாரும் அதற்க்கு பொருத்தமான அணிகலன்களும் அத்தனை அழகாகவும் பொருத்தமாகவும் வாங்கிஇருந்தான்.

"பாரு சும்மா எனோ தானோனு வாங்குனா இவ்ளோ அழகா பொருத்தமா வாங்க முடியுமா? போ போயி எல்லாத்தையும் போட்டு காட்டு உன் புருஷனுக்கு" என விசாலம் தமிழை மேலே அனுப்பி வைத்தார்.

ராமின் இந்த திடீர் மாற்றத்திற்க்கான காரணம் என்ன என புரியாமல் தமிழுக்கு நித்யா சொன்னதை போல பரிதாப பட்டு வாங்கி கொடுத்திருப்பாரோ என்ற சந்தேகமே வந்தது.

அவர்களின் அறையை நோக்கி சென்றவளுக்கு உள்ளே சென்று என்ன பேசுவது என தயக்கமாக இருந்தது. யோசனையுடன் உள்ளே செல்ல, ராம் உள்ளே இருக்கவில்லை. குளியலறையில் சத்தம் கேட்கவும், குளித்து கொண்டு இருப்பானாயிருக்கும் என்று எண்ணியவள் அந்த உடைகளை எல்லாம் எடுத்து கப்போர்டில் வைக்கவும் குளியலறையில் இருந்து வெளியே வந்த ராம் அவள் அறைக்குள் இருப்பதை கண்டான்.

"அவ போதும் போதும்னு சொல்ற வரைக்கும் உன்னுடைய லவ்வை காட்டு" அசோக் சொன்னதே காதில் ஒலிக்க, மெல்ல அவளின் அருகே சென்றவன் அவளின் பின்னால் சென்று நின்றான். அவளின் காதுக்கு பக்கத்தில் குனிந்தவன் "பிடிச்சிருக்கா?" என கேட்க, திடீரென கேட்ட சத்தத்தில் தூக்கிவாரி போட அதிர்ந்து திரும்பியவள் இடையோடு தாங்கி பிடித்தான் ராம். அவனின் தலையில் இருந்து வழிந்த குளிர்ந்து நீர் அவளின் கன்னத்தில் விழ அதை ராம் தன்னுடைய விரலால் மெல்ல துடைக்க, தமிழுக்கு அவளையும் அறியாமல் கன்னங்கள் சிவந்து போனது. அவளின் விரிந்த விழிகளை பார்த்தவனுக்கு தன்னை தானே கட்டுப்படுத்திக்கொள்வது கடினமாக இருக்கும்போல தோன்ற, அவளை நேராக நிற்க வைத்தவன் "டிரஸ் எல்லாம் பிடிச்சிருக்கானு கேட்டேன்" என்றான் சாதாரணம் போன்ற குரலில்.

10 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.