கிடைக்க அதன் மீது ஏறி அமர்ந்து கொண்டாள்.
அதற்குள் உடம்பெல்லாம் தடித்து வீங்கி போய் இருந்தது. அரிப்பினால் ஏற்பட்ட விளைவு என்பதை உணர்ந்தவளுக்கு இப்பொழுது நன்றாக குளித்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது.
ஆனாலும் தன் விருப்பத்தை தள்ளிவிட்டு அடுத்து எப்படி செல்லலாம் என்று யோசித்தாள். அருகில் இருந்த பாறையில் சாய்ந்து கொண்டு யோசித்தவள் இன்னும் வசதியாக நெருங்கி அமர பாறை ஆடத் தொடங்கியது.
சற்று பயந்து போனவள் அந்த பாறையை மெதுவாக உருட்டி விட அவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது. அந்தப் பாறையின் இடையே சிறிய படிக்கட்டுகள் போல தெரிய மிக கவனமாக இறங்க தொடங்கினாள்.
உள்ளே செல்ல செல்ல மிகவும் இருட்டாக இருக்க தடவி தடவி முன்னேறினாள். சிறிது நேரத்தில் படிக்கட்டுகள் முடிந்து விட்டது என்பதை உணர்த்தும் விதமாக அவள் பாதத்தை குளிர்ந்த நீரானது நனைத்தது.
ஒவ்வொரு அடியாக முன்னேற சிறிது தூரம் சென்ற பிறகு வெளிச்சம் கிடைத்தது. அதோடு அருவியின் சத்தம் காதைப் பிளந்தது. வெளிச்சம் வந்த திசையில் மேலும் நடக்க ஸ்தம்பித்த அப்படியே நின்றுவிட்டாள்.
அடுத்த அடி எடுத்து வைத்தால் அவள் அருவியோடு கலந்து கீழே விழு வேண்டியது தான். சுதாரித்து கொண்டவள் காலடியில் நீரோட்டமாக சென்ற அருவி நீரின் திசையில் திரும்பினாள்.
நல்லவேளை இதோடு பாதை முடிகிறது என்பதை புரிந்து கொண்டோம் என்று எண்ணியவள் அந்த நீரின் நீரோட்டத்தின் வழியாக திரும்பி நடந்து வழியை தேடினாள்.
நீரில் மூழ்கித் தேடினால் வழி தெரியலாம் என்று யோசித்தவள் மூச்சை அடக்கிக் கொண்டு அந்த வழியே சென்று வெளியேறியவள் ஒரு பாறையில் முட்டி நின்றாள்.
சுற்றி சுற்றி பார்த்தவள் அந்த பாறை மீது ஓவியங்கள் தெரியவும் விழி விரித்து பார்த்தாள். ஓவியமும் அதன் அருகே புத்தர் சிலையும் இருப்பதை பார்த்ததும் அவள் மனதில் உற்சாகம் ஊற்றெடுத்தது.
ஆர்வத்துடன் அந்த புத்த சிலை அருகே சென்று தொட்டுப் பார்த்தாள். ஆனால் அங்கு எந்த வழியும் இருப்பதாக தெரியவில்லை. அவள் தேடி வந்ததும் கிடைக்கவில்லை.
தேடி தேடி சலித்துப்போனவள் தவறான இடத்திற்கு வந்து விட்டோமோ என்று யோசிக்க அந்த பேப்பரை எடுத்துப் பார்த்தாள்.
அந்த ஓவியம் இப்போது இருக்கும் அந்த இடத்தோடு அப்படியே பொருந்தியிருந்தது.