இனி தேடி வந்த பொருள் இங்கே இருக்கிறதா என்பதை தேடவேண்டிய தான் என்று எண்ணியவள் தான் தேடி வந்ததை தேடி பயணத்தை தொடர்ந்தாள்.
அவளுக்கு முன்னால் இருந்த சுவற்றில் அலமாரி இருக்க அதை திறந்து பார்த்தாள். அதில் இருந்த பேப்பர் கட்டுகளை எடுத்து படிக்கத் தொடங்கினாள். அதை படித்து முடித்த பிறகு ஒன்று தெளிவாக புரிந்தது.
ராகவ் என்ற பெயரில் இருப்பதுதான் கார்த்திக். அதோடு அவரது வீட்டில் இருக்கும் அந்த சமையல்காரர் தான் அவரது அப்பா ராமச்சந்திரன் என்று.
அப்படி என்றால் அவனுடன் இருக்கும் அவனது அப்பாவிற்கு எல்லா உண்மையும் தெரியும். அதனால் தான் அன்று என்னை சென்றுவிட கூறியிருக்கிறார். அப்படி என்றால் உண்மையில் கார்த்திக் உடன் இருக்கும் அதாவது அவனுடைய அப்பா அம்மா என்று சொல்லிக்கொண்டு இருக்கும் அவர்கள் யார்? ஏன் அப்பா என்று சொல்லி கொண்டு கார்த்திக்கின் பெயரை ராகவ் என்று மாற்றினார்கள் என்று யோசித்தவள் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தாள்.
முழுவதும் படித்து முடித்தவள் அதோடு இருந்த புகைப்படங்களையும் எடுத்து பார்த்தாள்.
நம்மை அழிக்க துடிப்பவர்கள் இவர்கள்தான் என்று ஒரு பேப்பர் கட்டிங் ஒட்டி இருந்தது. அந்த பேப்பர் கட்டிங்கில் குயிலி குடும்பத்துடன் இன்னும் ஒரு குடும்பம் இருந்தது.
அந்த குடும்பத்தின் தலைவரை கூர்ந்து பார்த்தாள் குயிலி. ஆனால் அவரை எங்கும் பார்த்தது போல தோன்றவில்லை. ஆனால் அருகில் இருக்கும் அந்த பெண்ணை பார்த்ததும் அடையாளம் தெரிந்து கொண்டால் குயிலி.
இது... இது... இது ராகவ் வீட்டில் பார்த்த அவனது அம்மா தானே என்று யோசித்து பார்க்க அவர்கள் தான் என்று தெளிவாக தெரிந்தது.
யோசிக்க யோசிக்க அவளுக்கு எல்லாம் நினைவு வர தொடங்கியது. தலை வலிப்பது போல தோன்ற தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.
பெர்முடா முக்கோணத்தின் கடல் பகுதியில் அவளுக்கு நடந்த தீ விபத்தும் அங்கு தன் பெற்றோர்கள் எல்லாம் அவர்களால் சிறைபிடிக்கப்பட்டதும் சிறிது சிறிதாக நினைவுக்கு வர கூடவே கார்த்திக் இருந்ததும் நினைவுக்கு வந்தது.
ராமச்சந்திரன் மாமாதான் கார்த்திக்கின் அப்பா. ஆனால் அவர் ஏன் கார்த்திக்கிடம் இன்னும் நான் தான் அப்பா என்று சொல்லாமல் அவனுடன் அந்த வீட்டிலேயே இருக்கிறார். கார்த்திக்கின் பெயரை மாற்றி நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் மாமா எதுவும் சொல்லாமல் ஏன் அமைதியாக இருக்கிறார். ஏதோ ஒரு காரணத்திற்காக தான் மாமா எல்லாவற்றையும் மறைத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.