"என் பொண்ணா…" ஷீலாவிற்கு மனதில் மகிழ்ச்சி பரவியது… அவளுக்கு என்னை நினைவிருக்கிறது… அவசரமாக உள்ளே சென்றார்.
வெளியே வந்த மருத்துவர்…
"சாரி சத்யன் அவங்களுக்கு பழைய நினைவு திரும்பவில்லை. ரேச்சலாதான் தன்னை உணருகிறாங்க…"
"அப்படினா அவங்களுக்கு எங்களை தெரியவில்லையா...?" சத்யன் கேட்டான்.
"பக்கத்து வீட்டுகாரங்கனு சொன்னாங்க"
"அட… சத்யனை கூடவா தெரிலை.."
"சத்யனை தெரியுமானு கேட்டேன்… அவங்க என்ன சொன்னாங்கன்னா…"
"இல்லை வேண்டாம்… என்ன சொல்லி இருப்பாங்கனு எங்களுக்கே தெரியும்… விதியின் சதி…" ரஞ்சன் சோகமாக சொன்னான். ஷீலா உள்ளே போகவுமே சத்யன் வெளித்தள்ளப்பட்டு விட்டது புரிந்து விட்டது.அவள் மீராவாக இருந்திருந்தால் சத்யனை அல்லவா முதலில் அழைத்திருப்பாள்.
"வாட்…" என்ற மருத்துவருக்கு வேறு எதுவும் சொல்ல தோன்றவில்லை…
பாவம்…. மனைவிக்கு நினைவு திரும்பவில்லை என்பது சத்யனுக்கு கஷ்டமாகதான் இருக்கும்… அவரை பக்கத்து வீட்டுகாரன் என்பது இன்னும் சங்கடமாக இருக்கும்.
"இறைவனை வேண்டிக்கோங்க…" என்று சொல்லி சென்றார்.
எதுக்காம்… ?.
சத்யன் ஏமாற்றத்துடன் ரேச்சல் படுத்திருந்த அறையை பார்த்து கொண்டு நின்றான்.
"கொஞ்சம் கொஞ்சமாக மீராவிற்கு நினைவுகள் திரும்பும் சத்யன். கவலைபடாதே" ரஞ்சன் ஆறுதல் கூறினான்.
அப்போது ஷீலா வெளியே வந்தார்.
"அவளுக்கு உடல்நிலை நன்றாக இருப்பதால் இன்றைக்கே டிஸ்சார்ஜ் ஆகலாம்னு டாக்டர் சொல்லிட்டார்"
"ஓகே ஆன்ட்டி நீங்க ரேச்சலை அழைச்சிட்டு போங்க. ஹாஸ்பிட்டல் செட்டில்மென்ட்டை நான் பார்த்துக்கறேன்" என்று சத்யன் சொன்னான்.
"நானே பில்லை கட்டிடறேன்" ஷீலா சொல்ல,
"ப்ளீஸ்… எனக்கான பொறுப்பை இப்போதாவது செய்ய விடுங்கள். இத்தனை நாள் நீங்கள் அவளை பார்த்துக் கொண்டதற்கே நான் ரொம்பவும் கடன் பட்டிருக்கிறேன்."
"சரி.. தம்பி… நீங்கள் செய்யுங்க. நாங்கள் கல்பனாவை பார்த்து விட்டு கிளம்புகிறோம்"