கொடுத்தாலும் நான் ஏத்துக்கறேன்...”, கண்ணீருடன் கூறினாள் மைத்தி... மைத்தியையும், துளசியையும் சேர்த்ததில் உடன்பாடில்லாத நிறைய பேர் ஆனந்தத்துடன் பயிற்சியாளரை பார்த்தனர்... துளசி அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்துடன் பார்த்தாள்....
“மைத்தி அழுவதை நிறுத்து... நீ தப்பு பண்ணினேன்னு புரியவே உனக்கு இத்தனை நேரம் ஆகி இருக்கு... இதுல இருந்தே உன் மனநிலை எனக்கு புரியுது... ஆனா ஒரு விளையாட்டு வீராங்கனையா நீ இது எல்லாத்தையும் கடந்து வரணும்.... விளையாட்டு வீரர்களும் நாட்டுக்காக போராடுற ராணுவ வீரர்கள் போலத்தான்... மனசுல எதிரியை அழிக்கணும் அப்படிங்கற குறிக்கோள் மட்டும்தான் இருக்கணும்... நண்பர்கள், குடும்பம் இது எல்லாமே ரெண்டாம் பட்சம்தான்...”
“புரியறது கோச்... நான் பண்ணினது ரொம்ப பெரிய தப்புதான்....”
“இன்னைக்கு உன்னோட ஒரு நிமிட தடுமாற்றம் எத்தனை பெரிய இழப்பை கொடுத்திருக்கு பார்த்தியா... இதுக்கான தண்டனை உன்னை ஆட்டத்திலிருந்து எடுக்கறதுதான்... அதனால நீ ...”, பயிற்சியாளர் கூற வர, இடையிட்டாள் தலைவி...
“கோச் ப்ளீஸ் இந்த ஒரு முறை மைத்தி பண்ணின தப்பை மன்னிச்சு விட்டுடுங்களேன்... அவளுக்கு இந்த மாதிரி அரசியல் எல்லாம் புதுசு... வேறு எதை பத்தி பேசி இருந்தாலும் அவ கவனம் சிதறி இருக்காது... இன்னைக்கு அவங்கப்பாக்கு ஆபரேஷன் நடந்ததால அவ அதை நம்பிட்டா... இது அவளோட முதல் சர்வதேச போட்டி... இதுல கருப்பு புள்ளி விழுந்தா அது அவளோட எதிர்காலத்தையே பாதிக்கும்... ஒன்பது ஓவர் மைத்தி எப்படி பால் பண்ணினான்னு நீங்க பார்த்தீங்க... அதை எல்லாம் consider பண்ணி அவளை மன்னிச்சுடுங்க கோச்...”
தலைவி கூற, கூடவே சில நல்ல உள்ளங்களும் மைத்திக்கு ஆதரவாக பேச, பயிற்சியாளர் யோசனையில் ஆழ்ந்தார்...
“இந்த தப்புக்கு தண்டனை கொடுக்காம இருக்க முடியாது.... பெனால்டி கண்டிப்பா வரும்... அதை நீ கட்ட வேண்டி வரும்... அதிக தொகை வராம பார்த்துக்கறேன்... இனி நீ விளையாட போற ஆட்டத்துல உன்னோட முழுத்திறனும் வெளிவரணும்... இல்லைனா கண்டிப்பா அடுத்து ஆடப்போற எந்த போட்டிலயும் கலந்துக்க முடியாம பண்ணிடுவேன்... இதுக்கு ஒத்துக்கறியா....”, பயிற்சியாளர் கேட்க...
“கோச் எங்கப்பாக்கு இப்போ சிகிச்சைக்கே ஏகப்பட்ட பணம் செலவாகும்... அதனால ரொம்ப அதிக பணம் பெனால்டி கட்ட முடியுமான்னு தெரியலை... பணம் பத்தியெல்லாம் அம்மாட்டதான் இப்போதைக்கு கேக்க முடியும்... ஆனா நீங்க சொன்ன அடுத்த விஷயம் அதை கண்டிப்பா நான் நிறைவேத்துவேன்... இனி வரப்போற போட்டிகள்ல எந்த கவன சிதறலும்